மேலும் அறிய

Gyanvapi: ஞானவாபி மசூதி விவகாரம்; 10 நாட்களில் அறிக்கையை சமர்ப்பிக்க தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

Gyanvapi Mosque: ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் 10 நாள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ள அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதை எதிர்த்து மசூதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. 

ஞானவாபி மசூதி:

ஞானவாபி மசூதி வளாகத்தில் கிடைத்த கண்டுபிடிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு வாரணாசி நீதிமன்றம் 10 நாள் கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு முடிக்கப்பட்ட அதன் அறிவியல் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தொல்லியல் துறைக்கு நான்காவது முறையாக  நீதிமன்றத்தின் சார்பாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்திய தொல்லியல் துறை  21 நாட்கள் நீட்டிப்பு கேட்டது, அதற்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்தது. 5 பெண்கள் வளாகத்தில் பிரார்த்தனை செய்ய அனுமதி கோரியதை அடுத்து, ஜூலை 21 அன்று வாரணாசி நீதிமன்றத்தால் கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், வலது சாரிகளின்  மனுவின் அடிப்படையில், வளாகத்தை வீடியோ ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அரசியல் சலசலப்பு:

புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. வலதுசாரி ஆர்வலர்கள் அந்த இடத்தில் ஒரு கோவில் இருந்ததாகவும், முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 17 ஆம் நூற்றாண்டில் இடிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

அயோத்தி மற்றும் மதுராவுக்குப் பிறகு, ஞானவாபி மூன்றாவது கோயில்-மசூதி வரிசையாகும், இதுபோன்ற செயல்கள் 80கள் மற்றும் 90களில் பாஜகவை தேசிய அரசியலில் பெரும் இடத்திற்கு உயர்த்தியது. 

உத்தரபிரதேசத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி-ஷாஹி மசூதி இத்கா தகராறு தொடர்பாக ஏற்கனவே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 

கத்ரா கேசவ் தேவ் கோவிலின் 13.37 ஏக்கர் வளாகத்தில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் இது கட்டப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர். மசூதியை மாற்றக் கோரி உள்ளூர் நீதிமன்றங்களில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஞானவாபி மசூதி

ஞானவாபி மசூதியில் ஆண்டுக்கு ஒரு முறை இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், ஆண்டு முழுவதும் வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்க கோரி இந்து பெண்கள் ஐந்து பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். 

இதற்கு மத்தியில், இந்த மசூதி வளாகத்தில் உள்ளூர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீடியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, சிவலிங்கம் போன்ற தொன்மையான சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. 

இது எந்த காலத்தை சேர்ந்தது என்பது குறித்து ஆராய 'கார்பன் டேட்டிங்' முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்து மனுதாரர்கள் வேறு மனு ஒன்றை தொடர்ந்திருந்தனர். அந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் நிராகரித்தது.

இதை தொடர்ந்து, வழிபாடு மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி மனு தாக்கல் செய்த ஐந்து இந்து பெண்களில் நான்கு பேர், சிவலிங்கம் போன்ற சிலையின் தொன்மத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் போன்ற விஞ்ஞானப்பூர்வமான ஆய்வை நடத்த வேண்டும் என மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்து கடவுகளின் சிலைகள், மசூதிக்கு உள்ள இருப்பதாக அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். 

விஸ்வ வேத சனாதன சங்கம் கோரிக்கை:

ஆனால், கார்பன் டேட்டிங் போன்ற ஆய்வுக்கு மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. சிவலிங்கம் என சொல்லப்படும் சிலை, உண்மையிலேயே நீரூற்று என்றும் மசூதிக்கு செல்லும் இஸ்லாமியர்கள் வழிபடுவதற்கு முன்னதாக தங்களை சுத்தம் செய்ய அதை பயன்படுத்தி வருவதாகவும் மசூதி கமிட்டி விளக்கம் அளித்திருந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget