மேலும் அறிய

Accident : சபரிமலையில் இருந்து திரும்பும்போது நேர்ந்த பெரும் சோகம்.. 4 பேர் உயிரிழப்பு.. இத்தனை பேருக்கு காயம்!

ஆந்திராவில் இருந்து சபரிமலைக்கு சென்று திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில், 4 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பெதமா மண்டலம் பகுதியில்  இருந்து 19 பேர் கொண்ட குழு சபரிமலைக்கு சென்று வீடு திரும்பியது.  இன்று (டிச.5) காலை தெனாலி பகுதியில் உள்ள ரயில்வே நிலையத்தில் வந்து இறங்கிய அவர்கள், லோடு வேன் ஒன்றில் ஏறி சொந்த ஊருக்கு புறப்பட்டுள்ளனர்.  பாபட்லா மாவட்டம் வேமுரு மண்டலத்தில் உள்ள ஜம்பனி கிராமப்பகுதியில் அதிவேகமாக சென்றபோது, காலை நேரத்தில் நீடித்த அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக, வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.  இதனால் தறிகெட்டு ஓடிய வாகனம், சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் 4 பேர் பலி:

வாகனம் கவிழ்ந்ததில் அதில் பயணித்த பசம் ரமேஷ் (55), பாண்டுரங்க ராவ் (40), பவன் குமார் (25), பொத்தினா ரமேஷ் (42) ஆகியோர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு விபத்தில் 18 பேர் காயம்:

முன்னதாக நவம்பர் 19 ஆம் தேதி, ஆந்திராவில் இருந்து சபரிமலை பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள லாஹா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  எட்டு வயது சிறுவன் உட்பட 18 பேர் காயமடைந்தனர்.

சபரிமலைக்கு பயண கட்டுப்பாடுகள்:

அண்மையில் கேரள மோட்டார் வாகனத்துறை  வெளியிட்ட அறிக்கையில்,  சபரிமலைக்கு தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் வாடகை, சொந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும். ஆட்டோ, சரக்கு வாகனங்களை பயன்படுத்தி சபரிமலைக்கு பயணம் மேற்கொள்ள கூடாது. மோட்டார் சைக்கிள்களிலும் பம்பைக்கு செல்லக்கூடாது எனவும், அதுபோன்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும்,  தூக்கமின்மை அல்லது சோர்வுடன் பயணம் செய்வது ஆபத்தானது எனவும், கேரள மோட்டார் வாகனத்துறை பக்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.

தரிசன நேரம் மாற்றம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மழை, பனி என எதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து,  நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, வழக்கமாக மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், கடும் கூட்ட நெரிசல் காரணமாக கடந்த 22ம் தேதி  முதல் மாலை 3 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று முதல் சிறப்பு ரயில் சேவை:

ஹைதராபாத்தில் இருந்து கொல்லத்திற்கு (07053) வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பர் 5 முதல் 2023 ஜனவரி 9 வரை அனைத்து திங்கட்கிழமைகளிலும் இயக்கப்படும். இந்த ரயில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஹைதராபாத்தில் இருந்து பிற்பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 11.50 மணிக்கு கொல்லத்தை சென்றடையும். திரும்பும் போது, ​​வாராந்திர சிறப்பு ரயில் (07054) ஒவ்வொரு புதன்கிழமையும் டிசம்பர் 7 முதல் 2023 ஜனவரி 11 வரை அதிகாலை 2.30 மணிக்குத் தொடங்கும். இந்த ரயில் மறுநாள் (வியாழக்கிழமை) காலை 10.00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில்கள் தமிழ்நாடு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
"இந்தியாவின் முதல் 'ஸ்டாப்-லெஸ்' டோல்கேட்!" – சுங்கச்சாவடி வரிசையில் காத்திருக்க இனி வேலையில்லை
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Top 10 News Headlines: பத்திரிகை சுதந்திரம் பின் தங்கிய இந்தியா.. சிலிண்டர் விலை உயர்வு.. ஈரானை சாடும் டிரம்ப்
Commercial Cylinder Price : காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
காலையிலேயே ஷாக்.! சமையல் எரிவாயு விலை 993 ரூபாய் உயர்வு- அதிர்ச்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
TN Election 2026: தமிழ்நாடு யாருக்கு? இப்பவோ பட்டாசுகள், பொன்னாடை விற்பனை படுஜோர்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Vaiko: தவெக வலுவான சக்தியாக திகழும்.. ஆனால்.. வைகோ வைத்த ட்விஸ்ட்!
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
Boat Accident: ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் பலி- மகனை கட்டியணைத்து உயிரிழந்த தாய்
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
25 ஆயிரம் விலை நிரந்தர குறைப்பு! அறிமுகமாகியது Pulsar NS400Z - விலை எவ்ளோ?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Madras university: சென்னை பல்கலை. கல்லூரிகளில் இலவசக் கல்வி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதி?
Sasikumar:
Sasikumar: "சசிகுமார் எனும் ஃபீனிக்ஸ் பறவை.." புகழாரம் சூடிய நந்தன் பட இயக்குனர்!
"8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!" – வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்; லிஸ்ட்டில் உங்க ஊர் இருக்கா?
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
NEET UG 2026: மே 3-ல் நீட் தேர்வு: ஆடை, செருப்பு, பாட்டில்- என்னென்ன கட்டுப்பாடுகள் விதிப்பு? இதோ லிஸ்ட்!
Embed widget