Ideas of India 2026: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு - திறனும் & எதிர்காலமும் - 5வது எடிஷன்
ABP Ideas Of India Summit 2026: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

ABP Ideas Of India Summit 2026: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கில், எதிர்காலத்திற்கான பல ஆலோசனைகள் விவாதிக்கப்பட உள்ளன.
ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு:
எபிபி நெட்வொர்ட்க் சார்பில் நடத்தப்படும் முதன்மையான நிகழ்வான, ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கின் ஐந்தாவது எடிஷன் விரைவில் நடைபெற உள்ளது. இதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பிரபலங்களின் குரல் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரு இந்த உச்சபட்ச நிகழ்வானது, முன்னணி உலகளாவிய மன்றமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இங்கு விவாதிக்கபடும் கருத்துகள், புதுமை மற்றும் தலைமைத்துவம் ஆகியவை, வேகமாக மாறிவரும் உலகில் இந்தியாவின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய உரையாடல்களை வடிவமைக்க உதவுகின்றன.
சக்தி வாய்ந்த கருப்பொருள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விவாதங்களுக்கான மையமாக திகழும் இந்த கருத்தரங்கானது, இந்தியாவின் சமூக-அரசியல் சூழல், கலாச்சார பரிணாமம் மற்றும் பொருளாதார பயணம் ஆகியவற்றில் ஆழமான பார்வையை வழங்குகிறது. அதே நேரத்தில் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் செல்வாக்கை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் பயணம் & எதிர்காலத்திற்கான தளம்:
ஏபிபி நெட்வொர்க்கின் ஐந்தாவது எடிஷன் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கானது, பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. 2047ம் ஆண்டில் சுதந்திரமடைந்த நூற்றாண்டை இந்திய நெருங்கும் சூழலில், இதுவரை நாடு கண்டுள்ள முன்னேற்றம் மற்றும் நமக்கு முன்பாக தற்போதுள்ள மிகப்பெரிய வாய்ப்புகள் குறித்து கருத்தரங்கு பிரதிபலிக்க உள்ளது.
இந்த நிகழ்வு நாட்டில் நிலவும் மிக முக்கியமான சூழலுக்கு மத்தியில் நிகழ்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக, இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய உறுப்பினராக சீராக வளர்ந்து வருகிறது, வலுவான பொருளாதாரம், இளம் மற்றும் துடிப்பான பணியாளர்கள் மற்றும் நெகிழ்ச்சியான ஜனநாயக கட்டமைப்பால் ஆதரிக்கப்படுகிறது. இந்த வளங்கள் பல துறைகளில் மாற்றத்திற்கு இந்தியாவை எவ்வாறு நிலைநிறுத்துகின்றன என்பதை இந்த கருத்தரங்கு ஆராய உள்ளது.
ஆலோசனை, திறன்கள், வாய்ப்புகள்..
பாரம்பரிய நடைமுறையை தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம், கருத்தரங்கானது முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்து, இந்தியா மற்றும் உலகிற்கான தொலைநோக்குப் பார்வை என்ன என்பது விவாதிக்கப்பட உள்ளது. மும்பையில் நடைபெற உள்ள கருத்தரங்கானது ABP நெட்வொர்க்கின் இணைய பக்கங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் YouTube சேனல்கள் உள்ளிட்ட அதன் டிஜிட்டல் தளங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு எளிய அணுகலை உறுதி செய்கிறது.
சர்வதேச பிரச்னைகளும்..இந்தியாவின் பங்களிப்பும்..
புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையுடன் உலகம் போராடி வரும் இந்த நேரத்தில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு, ஒரு நிலையான உலகளாவிய சக்தியாக இந்தியாவின் சாத்தியமான பங்கைப் பற்றி விவாதிக்க முக்கியமான தளமாக செயல்படும். உரையாடல்கள் நாட்டின் சாதனைகள், நிலையான வளர்ச்சிக்கான அதன் அணுகுமுறை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.
உலகெங்கிலும் உள்ள சில கூர்மையான மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து நுண்ணறிவுமிக்க விவாதங்கள், நிபுணரகளின் கண்ணோட்டங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான யோசனைகளை பங்கேற்பாளர்களும் பார்வையாளர்களும் எதிர்பார்க்கலாம். உலக அரங்கில் இந்தியா தனது நிலையை தொடர்ந்து வலுப்படுத்தி வரும் நிலையில், ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கின் ஐந்தாவது எடிஷன், தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய நிகழ்வாக இருக்கும்.
























