மேலும் அறிய

Karnataka Accident : கர்நாடகாவில் அதிரவைக்கும் சோக சம்பவம்.. கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து 5 பேர் உயிரிழப்பு..

கர்நாடகாவில் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில்தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டம் திப்தூரைச் சேர்ந்த சந்திரப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு, ஜெயண்ணா ஆகிய 5 பேர் மைசூரில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றுள்ளனர். அந்நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தும்கூருக்கு காரில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே கார் வந்து கொண்டிருந்தது. 

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள காவிரி கால்வாயில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கால்வாயில் விழுந்த காரில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.

இதையடுத்து, அங்கு தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு காரை காவிரிக் கால்வாயில் இருந்து மீட்டனர். அதில் பயணித்த 5 பேர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி காருக்குள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து காவல்துறை அதிகாரி நத்தீஷ் கூறுகையில், ‘எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, 5 பேரும் மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  பிரேத பரிசோதனை செய்ய உடல்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். விபத்தில் இறந்தவர்கள் அனைவரும் உறவினர்கள்’ என தெரிவித்தார். இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: Nagpur Shocker : ஆபரேஷன் தியேட்டரில் டீ கொடுக்காததால் டாக்டர் செய்த சம்பவம்.. நோயாளிகள் அதிர்ச்சி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget