மேலும் அறிய

Nagpur Shocker : ஆபரேஷன் தியேட்டரில் டீ கொடுக்காததால் டாக்டர் செய்த சம்பவம்.. நோயாளிகள் அதிர்ச்சி

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

என்னதான் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து விட்ட போதிலும், இன்னும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கோடிக்கணக்கான மக்களிடம் உள்ளது. மாநில, மத்திய அரசும் மருத்துவ வசதியை கிராம புற மக்களுக்கும்  எளிதாக கிடைக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்றவாறு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வரை பல்வேறு வகையிலான மருத்துவமனைகள் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைத்தாலும், அது சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. மருத்துவர்களின் அலட்சியம், பணியாளர்களின் சரியான கவனிப்பின்மை, மருத்துவமனையின் சுகாதாரமற்ற தன்மை போன்றவை இன்னும் சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆங்காங்கே இதுதொடர்பாக எழும் புகார்களும் அரசால் சரிசெய்யப்பட்டு வருகிறது. 

இப்படியான நிலையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில்  அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி அங்குள்ள மௌடா பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் 8 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களில் நான்கு பெண்களின் அறுவை சிகிச்சை முதல்கட்டமாக நடைபெற்றுள்ளது.

அப்போது ஆபரேஷன் செய்த  மருத்துவர் தனக்கு டீ வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் பணியாளர்கள் டீ கொண்டு வர தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அம்மருத்துவர் உடனடியான ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த சமயத்தில் மீதமுள்ள 4 பெண்களும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

உடனடியான இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்களின் குடும்பத்தினரும் மாவட்ட மருத்துவ அலுவலரைத் தொடர்பு கொண்டு பணி மருத்துவரின் அலட்சியம் குறித்து புகாரளித்தனர். உடனடியாக வேறொரு மருத்துவரை அனுப்பி வைத்து அப்பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  மாவட்ட மருத்துவ அலுவலர் சௌமியா சர்மா,  இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது  எனவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
Embed widget