மேலும் அறிய

Nagpur Shocker : ஆபரேஷன் தியேட்டரில் டீ கொடுக்காததால் டாக்டர் செய்த சம்பவம்.. நோயாளிகள் அதிர்ச்சி

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் நடைபெற்றுள்ள சம்பவம் நோயாளிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

என்னதான் தனியார் மருத்துவமனைகள் வளர்ந்து விட்ட போதிலும், இன்னும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கோடிக்கணக்கான மக்களிடம் உள்ளது. மாநில, மத்திய அரசும் மருத்துவ வசதியை கிராம புற மக்களுக்கும்  எளிதாக கிடைக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்றவாறு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வரை பல்வேறு வகையிலான மருத்துவமனைகள் அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. 

ஆனால் அரசு மருத்துவமனைக்கு சென்றால் சிறப்பான மருத்துவம் கிடைத்தாலும், அது சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என்பது பலரின் ஆதங்கமாக உள்ளது. மருத்துவர்களின் அலட்சியம், பணியாளர்களின் சரியான கவனிப்பின்மை, மருத்துவமனையின் சுகாதாரமற்ற தன்மை போன்றவை இன்னும் சரி செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆங்காங்கே இதுதொடர்பாக எழும் புகார்களும் அரசால் சரிசெய்யப்பட்டு வருகிறது. 

இப்படியான நிலையில் நாக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில்  அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதன்படி அங்குள்ள மௌடா பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் 8 பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். அந்த 8 பேரும் சிகிச்சைக்காக வந்துள்ளனர். அவர்களில் நான்கு பெண்களின் அறுவை சிகிச்சை முதல்கட்டமாக நடைபெற்றுள்ளது.

அப்போது ஆபரேஷன் செய்த  மருத்துவர் தனக்கு டீ வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் பணியாளர்கள் டீ கொண்டு வர தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடுப்பான அம்மருத்துவர் உடனடியான ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த சமயத்தில் மீதமுள்ள 4 பெண்களும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

உடனடியான இந்த சம்பவம் தொடர்பாக 4 பெண்களின் குடும்பத்தினரும் மாவட்ட மருத்துவ அலுவலரைத் தொடர்பு கொண்டு பணி மருத்துவரின் அலட்சியம் குறித்து புகாரளித்தனர். உடனடியாக வேறொரு மருத்துவரை அனுப்பி வைத்து அப்பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த  மாவட்ட மருத்துவ அலுவலர் சௌமியா சர்மா,  இந்த சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது  எனவும், அதனடிப்படையில் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Musk Criticizes Trump: “முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
“முழுசா விரோதியா மாறுன நண்பன பார்“ - ட்ரம்ப்பின் மசோதாவை ‘அருவருப்பு‘ என விமர்சித்த மஸ்க்
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
Covid 19 in TN: தமிழ்நாட்டில் கொரோனா பரவல்; பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தகவல் சொன்ன அமைச்சர் அன்பில்!
CJI BR Gavai: “ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
“ஓய்வு பெற்ற உடன் நிச்சயம் அப்படி செய்ய மாட்டேன்“ - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓபன் Talk
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
RCB Parade: கப்போட வர்றோம் - பெங்களூருவில் பேரணியாக செல்லும் ஆர்சிபி படை - எங்கு? எப்போது? எப்படி காணலாம்
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 12th Answer Sheet: மாணவர்களே.. இன்று முதல் பிளஸ் 2 விடைத்தாள் நகல்; எங்கே, எப்படி பெறலாம்? மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
Ponmudi : ‘சஸ்பெண்ட் செய்யப்படுகிறாரா பொன்முடி?’ பதவியை பிடுங்கியும் வாய் பேசுவதால் திட்டம்..!
D Jayakumar  : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
D Jayakumar : ‘இப்படி பண்ணீட்டிங்களே EPS – உடைந்துபோன ஜெயகுமார்’ காரணம் இதுதான்..!
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Volkswagen: ஒரே அடி, ரூ.2.7 லட்சம் தள்ளுபடி, உயிரை காக்கும் கார் - 5 ஸ்டார் ரேட்டிங்கில் அசத்தும் ஃபோக்ஸ்வேகன் கார்கள்
Embed widget