மேலும் அறிய

Uniform Civil Code: பொது சிவில் சட்டம் இல்லை.. பொது சாதி சட்டம்தான் தேவை.. அம்பேத்கரை மேற்கோள் காட்டும் திமுக

பொது சிவில் சட்டத்தை முன்வைக்கும் முன் சாதி பாகுபாட்டை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கும் பாஜக அரசு:

"இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவைப்படுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு தனி சட்டங்கள் என்ற இரட்டை அமைப்புடன் நாடு இயங்க முடியாது" என பிரதமர் மோடி என பேசியிருந்தார். இந்த பேச்சின் மூலம் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சி எடுத்து வருவது தெளிவாகிறது.

இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தன்னுடைய நிலைபாட்டை விளக்கி 22ஆவது சட்ட ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது. பல்வேறு சட்ட நுணுக்கங்களை மேற்கோள் காட்டி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், பொது சிவில் சட்டம் தேவை இல்லை. பொது சாதி சட்டம்தான் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

"பொது சிவில் சட்டத்தை முன்வைக்கும் முன் சாதி பாகுபாட்டை ஒழித்து சமத்துவத்தை கொண்டு வர வேண்டும். அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் வருவதற்கு முன், சாதி பாகுபாடு மற்றும் கொடுமைகளை ஒழிக்க பொது சாதி சட்டம் தேவைப்படுகிறது.

"பொது சிவில் சட்டம் இல்லை..பொது சாதி சட்டம்தான் தேவை"

பொது சிவில் சட்டம், அனைத்து மதப்பிரிவு மக்களின் உரிமைகளின் மீதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். மதச்சார்பற்ற நெறிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, மாநிலத்தின் அமைதி மற்றும் மாநிலங்களுக்கு அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டமன்ற அதிகாரங்களில் தலையீடூம். பேரழிவு விளைவை ஏற்படுத்தும்.

சிங்கத்துக்கும் எருதுக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்பது அடக்குமுறையாகும். ஒவ்வொரு மதமும் தங்கள் நம்பிக்கைகள் மற்றும் மத நூல்களுக்கு ஏற்ப பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளதனித்துவமான, பழக்கம் மற்றும் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளன. மிருகத்தனமான சக்தியால் அவர்களைத் துன்புறுத்துவது கொடுங்கோன்மை. அடக்குமுறைக்கு குறைவானது அல்ல. அது அரசால் செய்யப்படக்கூடாது.

இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு பொது சிவில் சட்டம் விரும்பத்தகாதது. அரசியல் ஆதாயங்களுக்காக பொது சிவில் சட்டம் போன்ற பிரிவினைச் சட்டம் கொண்டு வருவது தமிழ்நாட்டில் மதக் குழுக்களிடையே அமைதி, மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி வேண்டாம் என்கிறோம்.

"பொது சிவில் சட்ட விவகாரத்தை எச்சரிகையுடன் கையாள வேண்டும் என சொன்னவர் அம்பேத்கர்"

விரிவான ஆலோசனை மற்றும் ஆய்வுக்குப் பிறகு, 21வது சட்ட ஆணையம் 2018 ஆம் ஆண்டில், பொது சிவில் சட்டம் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல என தெரிவித்தது. 21வது சட்ட ஆணையம் அதற்கு பதிலாக உரிமைகள் சார்ந்த அணுகுமுறையை முன்மொழிந்துள்ளது. சம உரிமைகளை வழங்குவதற்கும், இந்திய அரசியலமைப்பின் 14 வது பிரிவின் கீழ் உள்ள சமத்துவத்தை அடைவதற்கும் அந்தந்த தனிப்பட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதை பரிசீலிக்க வேண்டும்.

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் கூட பொது சிவில் சட்டத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். மேலும், பொது சிவில் சட்டத்திற்கு கட்டுப்பட விரும்புவோருக்கு முதலில் அதைப் பயன்படுத்த நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என விரும்பினார்.
வரைவுக் குழுவின் தலைவர் அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இன்று, மத்திய அரசு விரும்பாத சிறுபான்மையினரின் சிறப்பு அடையாளங்களை பறிக்க பொது சிவில் சட்டத்தை கட்டாயப்படுத்த முயற்சிக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! கடைசி நேரத்தில் ரயில் நிலையம் மாறும் வசதி! விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
தூத்துக்குடிக்கு ரயில் சேவை: ஹைதராபாத் பயணிகள் குஷி! நிரந்தர ரயிலாக மாறியது, முழு விபரம் இதோ!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ஏப்ரல் 1 முதல் E20 பெட்ரோல் கட்டாயம்! உங்கள் வண்டிக்கு என்ன நடக்கும்? அதிர்ச்சி தரும் உண்மை!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Attacks Iran: ”கமேனியை கொன்னுட்டோம்” - அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் தாக்குதல் அப்டேட்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
USA Iran: ”நான் செத்துட்டேனா” ட்ரம்புக்கு தக் லைஃப் கொடுத்த ஈரான் தலைவர் கமேனி.. ஈரான் அமெரிக்கா மோதல்
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
DMK Alliance:ஒரே நாளில் 2 கட்சிக்கு தொகுதிப்பங்கீட்டை முடித்த திமுக! எந்தெந்த கட்சி? எத்தனை சீட்டு?
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
C Vijaya Baskar: மாற்றம் பெறும் விராலிமலை.. மக்களுக்கு சர்ப்ரைஸ்.. விஜயபாஸ்கரின் மாஸ்டர் பிளான் இதுதான்!
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
T20 WC PAK vs SL: பட்டாசாய் வெடித்த பாகிஸ்தான்.. 213 ரன்கள் டார்கெட்! அரையிறுதிக்கு ஆப்பு வைக்குமா இலங்கை?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
ஈரான்-இஸ்ரேல் போர்: மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் ரத்து! பயணிகளுக்கு என்ன நடக்கும்?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
மக்களே நோட் பண்ணுங்க.. மார்ச் 1 முதல் வாட்ஸ்அப், டெலிகிராமில் அதிரடி மாற்றம்!
Embed widget