மேலும் அறிய

சபரிமலை: பக்தர்களின் தரிசனம் எளிதானது! கூட்ட நெரிசல் குறைய முக்கிய காரணம் என்ன? அமைச்சர் ஆய்வு!

சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் வருகை ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை நிலைமைக்கேற்ப அதிகரிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தை முன்னிட்டு பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். நவம்பர் 17ஆம் தேதி கோவில் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 4,94,151 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  நேற்று மாலை 7 மணி வரையில் மட்டும் 72,037 பேர் வந்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.


சபரிமலை: பக்தர்களின் தரிசனம் எளிதானது! கூட்ட நெரிசல் குறைய முக்கிய காரணம் என்ன? அமைச்சர் ஆய்வு!

ஆனால் இன்று காலை, கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது பக்தர் நெரிசல் குறைவாக இருந்தது. அதிக நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது. கூட்ட நெரிசல்  குறைந்ததற்கான முக்கிய காரணம், ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை தினசரியாக 5,000 ஆக மாற்றப்பட்டதே  என அதிகாரிகள் கூறுகின்றனர். இதனிடையே, ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையை நிலைமைக்கேற்ப அதிகரிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. ஆனால் அந்த உத்தரவு தேவசம் வாரியத்திற்கு நேரத்தில் கிடைக்காததால் இன்று காலை நடைமுறைப்படுத்தப்படவில்லை.பக்தர்கள் 18 படிகளை நோக்கி செல்லும் பகுதியில் கடந்த சில நாட்களாக நெரிசல் ஏற்பட்டிருந்தது. இதற்கு முக்கிய காரணம், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் KAP (Kerala Armed Police) மட்டுமே இருந்த நிலை. இதனால் கட்டுப்பாடுகள் தளர்ந்து பக்தர்கள் வருகை தாமதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக IRB (India Reserve Battalion) படையும் இணைக்கப்பட்டதால், பக்தர்களின் அனுமதி நடைமுறை வேகமாகி, நீண்ட வரிசைகள் முற்றிலும் குறைந்துள்ளன.


சபரிமலை: பக்தர்களின் தரிசனம் எளிதானது! கூட்ட நெரிசல் குறைய முக்கிய காரணம் என்ன? அமைச்சர் ஆய்வு!

இதனால் நேற்று மற்றும் இன்று காலை பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய முடிந்தது. கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றியதன் விளைவாக கூட்டநெரிசல் குறைந்தது என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மண்டல, மகர விளக்கு காலத்தைக் கருத்தில் கொண்டு, சபரிமலையில் நடைபெற்று வரும் வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், பக்தர் நெரிசல் கட்டுப்பாடு உள்ளிட்ட அம்சங்களை நேரடியாக ஆய்வு செய்ய தேவசம் துறை அமைச்சர் வி.ஏன். வாசவன் இன்று சன்னிதானத்தில் வருகை தர உள்ளார். இதற்கான அனுமதியை உயர்நீதிமன்றம் நேற்று வழங்கியது. தேர்தல் நெறிமுறைகள் அமலில் உள்ளதால், ஊடக சந்திப்பு நடத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அமைச்சரின் வருகையையொட்டி சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் பகுதிகளில் காவல் ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி, க்யூ மேலாண்மை, ரோந்து பணிகள் ஆகியவை சீராக நடப்பதை அமைச்சரிடம் விளக்க உள்ளனர்.வார இறுதி தொடங்கியதால் இன்று மற்றும் நாளை பக்தர் வருகை அதிகரிக்கும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உயர்நீதிமன்றம் அனுமதித்திருக்கும் கூடுதல் ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கையும் இன்று மாலைக்குள் நடைமுறைக்கு வரும் வாய்ப்பு உள்ளது. அதுவரை தினசரி 5,000 பேர் மட்டுமே ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை இணைய பதிவு இடங்கள் ஏராளமாக நிரம்பி வருவதாலும், அடுத்த சில வாரங்களில் நெரிசல் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. பாதுகாப்பு படைகள் முழுநேர கண்காணிப்பில் உள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget