மேலும் அறிய

Delhi murder case: டெல்லி கொலை வழக்கு...குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருக்கும் ஆப்தாப்... உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி..!

Delhi murder case: தனது காதலியான ஷ்ரத்தாவை கொன்றதாக ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கொலை செய்ததற்கு அவர் வருத்தும் எதுவும் தெரிவிக்கவில்லை.

Delhi murder case: டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை உலுக்கியது. 
 
ஷ்ரத்தா கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அவர் தவறான தகவல்களை அளித்து விசாரணை திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, அவருக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்த தெற்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், அவருக்கு பாலிகிராஃப் மற்றும் நார்கோ சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இந்ந சூழலில் அவருக்கு அன்று பாலிகிராஃப் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் அவரின் ரத்த அழுத்தம், துடிப்பு, சுவாசம், தோல் கடத்துத்திறன் போன்ற உடலியல் குறிகாட்டிகள் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தனது காதலியான ஷ்ரத்தாவை கொன்றதாக ஆப்தாப் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கொலை செய்ததற்கு அவர் வருத்தம் எதுவும் தெரிவிக்கவில்லை என சோதனை நடத்திய குழுவில் இடம்பெற்றவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

பாலிகிராஃப் சோதனையில் அல்லது அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நார்கோ சோதனையில் இதுபோன்ற ஒப்புதல் வாக்குமூலம் வழக்கமாக ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், அதன் வழியாக வெளிவரும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்று கொள்ளும்.

அடுத்ததாக, டிசம்பர் 1ஆம் தேதி, நார்கோ சோதனை என்றழைக்கப்படும் பொய் கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது. இந்தச் சோதனையில், 'ட்ரூத் சீரம்' எனப்படும் சோடியம் பெண்டோதல் குறிப்பிட்ட நபருக்கு செலுத்தப்பட்டு, ஒரு ஹிப்னாடிக் மனநிலையைத் தூண்டி, கற்பனையை நடுநிலையாக்கும்.

இந்த அமைதியான மனநிலையில், ஒரு நபர் உண்மையைப் பேசுகிறார் என்று நம்பப்படுகிறது. இந்த மருந்து அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்தாக அதிக அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

கொலையை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்காதபோது, விசாரணை அமைப்புகள் இந்த சோதனைகளை நடத்துகிறது.

உதாரணமாக, இந்த வழக்கில், கொலை மே மாதம் செய்யப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் ஷ்ரத்தாவுடையது என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. டிஎன்ஏ சோதனை அறிக்கைக்காக காவல்துறை காத்து கொண்டிருக்கிறது.

கொலை குறித்து முக்கிய தகவல் ஒன்றை டெல்லி காவல்துறை வட்டாரம் சமீபத்தில் பகிர்ந்தது. அதாவது, கொலை செய்த பிறகு ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை ஆப்தாப் எரித்திருப்பது தெரிய வந்தது. 

முதலில் ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி, பின்னர் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அடையாளம் தெரியாத வகையில் முகத்தை எரித்திருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

"எப்படி கொலை செய்ய வேண்டும், அதை எப்படி மறைக்க வேண்டும் என்பதை ஆப்தாப் இணையத்தில் கற்றுக்கொண்டுள்ளார். விசாரணையின்போது, இதை ஆப்தாப் தெரிவித்துள்ளார்" என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget