மேலும் அறிய

அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களிலேயே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த பெயர் இதுவாகும்.


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்த புயல் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிஸா - பங்களாதேஷ் இடையே கரையை நாளை கடக்கும் என்று இந்திய தேசிய வானிலை மையம் தெரிவித்தது. அதன்படியே தற்போது யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப்புயல் வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என்றும், கரையைக் கடக்கும்போது 165 kmph முதல் 185 kmph வரை காற்றுவீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புயல் கரையைக் கடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளார். 
இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த சவாலான கொரோனா காலக்கட்டத்தில் நமக்கு இன்னுமொரு சவாலாக புயல்  உள்ளது. அனைவரின் உயிரையும் காப்பதே தலையாய கடமை. புயல் நெருங்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். யாஸ் புயலை சமாளிக்கும் விதமாக மேற்கு வங்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலின் தாக்கம் இல்லாவிட்டாலும், கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப முதலமைச்சர் மம்தா பனர்ஜியின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாஸ் புயல் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதனுடைய தாக்கம் கடலோர மாவட்டங்களில்  வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வீசி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவுகிறது. 


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கருப்பு பூஞ்சைக்கு தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமா? சந்தேகம் கிளப்பும் மருத்துவர்கள்!


 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
Innova Hycross Facelift: அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
அடி சக்க.! இன்னோவா ஹைக்ராஸை ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் அவதாரத்தில் இறக்கும் டோயோட்டா; சிறப்பம்சம் என்ன.?
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
Embed widget