மேலும் அறிய

அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களிலேயே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த பெயர் இதுவாகும்.


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்த புயல் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிஸா - பங்களாதேஷ் இடையே கரையை நாளை கடக்கும் என்று இந்திய தேசிய வானிலை மையம் தெரிவித்தது. அதன்படியே தற்போது யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப்புயல் வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என்றும், கரையைக் கடக்கும்போது 165 kmph முதல் 185 kmph வரை காற்றுவீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புயல் கரையைக் கடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளார். 
இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த சவாலான கொரோனா காலக்கட்டத்தில் நமக்கு இன்னுமொரு சவாலாக புயல்  உள்ளது. அனைவரின் உயிரையும் காப்பதே தலையாய கடமை. புயல் நெருங்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். யாஸ் புயலை சமாளிக்கும் விதமாக மேற்கு வங்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலின் தாக்கம் இல்லாவிட்டாலும், கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப முதலமைச்சர் மம்தா பனர்ஜியின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாஸ் புயல் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதனுடைய தாக்கம் கடலோர மாவட்டங்களில்  வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வீசி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவுகிறது. 


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கருப்பு பூஞ்சைக்கு தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமா? சந்தேகம் கிளப்பும் மருத்துவர்கள்!


 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget