மேலும் அறிய

அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது

அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த 18-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இதன் காரணமாக மேற்கு கடலோர பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா பகுதிகளிலும் மழை அதிகமாக பதிவாகி , சேதத்தை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களிலேயே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவானது. இந்தக் காற்றழுத்த தாழ்வு மையம் பின்னர் புயலாக மாறியது. இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்தப் புயலுக்கு ஓமன் நாடு கொடுத்த பெயர் இதுவாகும்.


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்த புயல் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிஸா - பங்களாதேஷ் இடையே கரையை நாளை கடக்கும் என்று இந்திய தேசிய வானிலை மையம் தெரிவித்தது. அதன்படியே தற்போது யாஸ் புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இந்தப்புயல் வடக்கு ஒடிஷாவில் உள்ள பாலாசூர் பகுதியில்  நாளை கரையைக் கடக்கக்கூடும் என்றும், கரையைக் கடக்கும்போது 165 kmph முதல் 185 kmph வரை காற்றுவீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் புயல் கரையைக் கடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த ஆணையிட்டுள்ளார். 
இது குறித்து தெரிவித்துள்ள அவர், இந்த சவாலான கொரோனா காலக்கட்டத்தில் நமக்கு இன்னுமொரு சவாலாக புயல்  உள்ளது. அனைவரின் உயிரையும் காப்பதே தலையாய கடமை. புயல் நெருங்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். யாஸ் புயலை சமாளிக்கும் விதமாக மேற்கு வங்கமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயலின் தாக்கம் இல்லாவிட்டாலும், கடுமையான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அதற்கேற்ப முதலமைச்சர் மம்தா பனர்ஜியின் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. யாஸ் புயல் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதனுடைய தாக்கம் கடலோர மாவட்டங்களில்  வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக வீசி வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இதமான சூழல் நிலவுகிறது. 


அதிதீவிர புயலாக மாறிய யாஸ்; நாளை கரையை கடக்கிறது!

இந்தாண்டு டவ்தே புயலுக்கு பிறகு வரும் இரண்டாவது புயல் யாஸ் ஆகும். மேலும் வங்கக்கடலில் உருவாகும் முதல் புயல் இதுவாகும். அடுத்த சில நாட்களுக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் பகுதிகள் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் மீன்வர்கள் வரும் 26 தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


கருப்பு பூஞ்சைக்கு தொழிற்சாலை ஆக்சிஜன் காரணமா? சந்தேகம் கிளப்பும் மருத்துவர்கள்!


 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

AP Fuel Crisis:பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - 400-க்கும் மேற்பட்ட பங்குகள் மூடல்! ஆந்திராவில் பீதியில் பொதுமக்கள்!
AP Fuel Crisis:பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு - 400-க்கும் மேற்பட்ட பங்குகள் மூடல்! ஆந்திராவில் பீதியில் பொதுமக்கள்!
Bengaluru Power Cut: பெங்களூருவில் அதிகரித்த மின் தேவை! மின்வெட்டால் மக்கள் அவதி! காரணம் என்ன?
Bengaluru Power Cut: பெங்களூருவில் அதிகரித்த மின் தேவை! மின்வெட்டால் மக்கள் அவதி! காரணம் என்ன?
காருண்யா லாட்டரி ரிசல்ட்: ரூ 1 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
காருண்யா லாட்டரி ரிசல்ட்: ரூ 1 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்ததா? உடனே செக் பண்ணுங்க!
Modi on Trump Incident: “ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை“; ட்ரம்ப் நிகழ்வில் சூப்பாக்கிக்சூடு குறித்து மோடி போட்ட பதிவு என்ன.?
“ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை“; ட்ரம்ப் நிகழ்வில் சூப்பாக்கிக்சூடு குறித்து மோடி போட்ட பதிவு என்ன.?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: சென்னையில் வாக்குப்பதிவு அதிகமா? குறைவா? 2021 VS 2026 தேர்தல் ஒப்பீடு!
TN Election 2026: சென்னையில் வாக்குப்பதிவு அதிகமா? குறைவா? 2021 VS 2026 தேர்தல் ஒப்பீடு!
Hormuz Strait: உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் - ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!
Hormuz Strait: உணவு பஞ்சம் வருமா? ஹார்முஸ் நீர்சந்தி மூடல் - ஐநா விடுத்த பகீர் எச்சரிக்கை!
Annamalai: எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!
Annamalai: எம்பி ஆகிறார் அண்ணாமலை? ஆந்திராவில் இருந்து அடித்துள்ள ஜாக்பாட்!
Raghuvanshi: ரகுவன்ஷி சர்ச்சை அவுட்! கொல்கத்தா - லக்னோ போட்டியில் நடந்தது என்ன?
Raghuvanshi: ரகுவன்ஷி சர்ச்சை அவுட்! கொல்கத்தா - லக்னோ போட்டியில் நடந்தது என்ன?
TVK Vijay: 2006 vs 2026! விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்? ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா தவெக?
TVK Vijay: 2006 vs 2026! விஜயகாந்த் போல ஜொலிப்பாரா விஜய்? ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியா தவெக?
Trump Vs Pezeshkian: “உங்க அழுத்தத்துக்கு பயந்தெல்லாம் பேச முடியாது“; ட்ரம்ப்புக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரான் அதிபர்
“உங்க அழுத்தத்துக்கு பயந்தெல்லாம் பேச முடியாது“; ட்ரம்ப்புக்கு சம்மட்டி அடி கொடுத்த ஈரான் அதிபர்
Lungi Ngidi: ” நல்லா இருக்கேன்”காயத்தில் இருந்து மீண்ட லுங்கி என்கிடி! டெல்லி ரசிகர்களுக்கு நிம்மதி
Lungi Ngidi: ” நல்லா இருக்கேன்”காயத்தில் இருந்து மீண்ட லுங்கி என்கிடி! டெல்லி ரசிகர்களுக்கு நிம்மதி
Sri Lanka Monks Drugs: புத்த துறவிகள் வேடத்தில் வந்த போதைப் பிறவிகள்; இலங்கையில் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
புத்த துறவிகள் வேடத்தில் வந்த போதைப் பிறவிகள்; இலங்கையில் ரூ.110 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்
Embed widget