மேலும் அறிய

அதிர்ச்சி! 54 இந்திய இருமல் மருந்துகள் ஏற்றுமதி தர பரிசோதனையில் தோல்வி

54 இந்திய மருந்து நிறுவனங்களின் இருமல் மருந்து மாதிரிகள் ஏற்றுமதி தர சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் மருத்துவத்துறை என்பது உலகின் மிகவும் முக்கியமான மருத்துவத்துறையாகவும் திகழ்கிறது. இந்தியாவில் ஏராளமான நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மருந்துகள் பரிசோதனை:

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகள் உள்பட பல மருந்துகள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சமீபகாலமாக, சில ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்படும் இந்திய மருந்துகள் காரணமாக சில குழந்தைகள் உயிரிழந்ததாக எழுந்த விவகாரம் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிர்ணயம் நாடு முழுவதும் பல்வேறு மருந்துகளை ஏற்றுமதி தர பரிசோதனை செய்துள்ளது. மகாராஷ்ட்ரா, குஜராத், உத்தரபிரதேசம், சண்டிகர் உள்பட நாட்டின் முக்கியமான மருத்துவ பரிசோதனை கூடத்தில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.

6 சதவீத மருந்துகள்  தர பரிசோதனை தோல்வி:

மொத்தம் இந்த சோதனைக்கு 2 ஆயிரத்து 14 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இருந்து இந்த மாதிரிகள் சேரிக்கப்பட்டுள்ளது. இதில் 128 மாதிரிகள் அதாவது 6 சதவீத மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், அரசு தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி குஜராத் பரிசோதனை கூடத்தில் சோதனை செய்யப்பட்ட 351 மாதிரிகளில் 51 தரமற்று இருந்ததாக கூறப்படுகிறது. காசியாபாத்தில் நடத்தப்பட்ட 502 மாதிரிகளின் சோதனையில் 29 தரமற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளினால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இருமல் மருந்துகளின் தரத்தை கண்காணிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடுகளில் குழந்தைகள் மரணம்:

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு தயாரிக்கப்படும் இருமல் மருந்தே உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணத்திற்கு காரணம் என்று செய்திகள் வெளியானது. காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பிற்கும் இந்திய இருமல் மருந்தே காரணம் என்றும் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவின் பல நகரங்களில் இருமல் மருந்துகளின் மாதிரிகளே சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 54 மருந்து நிறுவனங்களின் மருந்துகள் தர பரிசோதனையில் தோல்வி அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தர பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளது. இந்த மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Cyclone Michaung: ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடந்தது மிக்ஜாம் புயல்; மணிக்கு 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று

மேலும் படிக்க: சத்தீஸ்கரில் பழங்குடி பெண்தான் அடுத்த முதலமைச்சர்? பிரதமர் மோடியின் சர்ப்ரைஸ்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி? தேர்வர்கள் கருத்து- குறையும் கட் ஆஃப்?
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
இனி கடைசி இருக்கையே கிடையாது; ப வடிவ இருக்கை முறை- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Embed widget