மேலும் அறிய

Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்

Arvind Kejriwal Bail Case: அரவிந்த் கெஜ்ரிவால், தனது ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டும் அனுமன் கோயிலில் பிரார்த்தனை செய்துவிட்டும் சிறைக்கு புறப்பட்டார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார். 

சிறைக்கு செல்லும் முன் பேட்டி:

அப்போது, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது, ”என் மீதான குற்றங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 21 நாட்களில் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்கவில்லை. எனக்கு, தேர்தல் பரப்புரைக்காக 21 நாட்கள் வழங்கிய உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. ஆம் ஆத்மி கட்சி எங்களுக்கு முக்கியமில்லை, தேசம்தான் முக்கியம்” என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார். 


Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்

 

கருத்துக் கணிப்புகள் குறித்து தெரிவிக்கையில், எல்லா கருத்துக் கணிப்புகளும் போலியானவை என்று என்னால் சொல்ல முடியும். ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 இடங்களில் பாஜகவுக்கு 33 இடங்கள் கிடைக்கும் என ஒரு கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கொடுக்க வேண்டும் என்று யாரோ அறிவுறுத்தியிருக்க வேண்டும் என கருத்து கணிப்புகள் குறித்து கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 

சிறைக்கும் முன் மரியாதை மற்றும் வழிபாடு

பெரும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து இடைக்கால பிணையில் வெளியே வந்து, மக்களவை தேர்தலுக்கான பரப்புரை மேற்கொண்டார். 

இந்நிலையில், இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில் இன்று திகார் சிறைக்கு புறப்பட்டார் . இதற்கு முன்பு மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

மஹாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும்போது, அரவிந்த் கெஜ்ரிவாலுடன், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, சவுரப் பரத்வாஜ், கைலாஷ் கஹ்லோட் மற்றும் பிற ஆம் ஆத்மி தலைவர்கள் பங்கேற்றனர்.
 
இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர்  உள்ளிட்டோர் கன்னாட் பிளேஸில் உள்ள அனுமன் கோயிலில் வழிபாடு செய்தனர்.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு:

டெல்லி உயர்நீதிமன்றத்தில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம்  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, மார்ச் மாதம் 21ஆம் தேதி திகார் சிறையில் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டார். பின்னர் கெஜ்ரிவால் காவலை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், அரவிந்த கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் தொடர்பாக, கடந்த மே 9ஆம் தேதி, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்தது.

இதையடுத்து, மே 10ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிlலையில் ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், மீண்டும் சிறைக்கு திரும்பினார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
USA vs IRE T20 World Cup: கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை.. சூப்பர் 8 சுற்றுக்கு அமெரிக்கா தகுதி!
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
சிறுத்தை நடமாட்டம்! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை; காரில் சிக்கித்தவித்த 5 பேர் மீட்பு
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Tirupathur Leopard: திருப்பத்தூரில் பள்ளிக்கு அருகே முகாமிட்டுள்ள சிறுத்தை! எங்கிருந்து வந்தது தெரியுமா?
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Breaking News LIVE: சிறுத்தைக்கு பயந்து காருக்குள் பதுங்கிய 5 பேர் மீட்பு
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை!
சாதி மறுப்பு திருமணம்:  நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
சாதி மறுப்பு திருமணம்: நெல்லை மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் அலுவலகத்தை சூறையாடிய பெண் வீட்டார்..!
மீன் லாரிக்குள் இருந்த  1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
மீன் லாரிக்குள் இருந்த 1000 கிலோ போதைப் பொருட்கள் - சிக்கியது எப்படி...?
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
Coimbatore Cricket Stadium: கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடம் ஆய்வு; வாக்குறுதியை நிறைவேற்ற களமிறங்கிய உதயநிதி
Embed widget