மேலும் அறிய

Shocking Video : குழந்தையை தூக்கி வீசும் கொடூரம்.. தத்தெடுப்பு மையத்தில் நடந்த பயங்கரம்...பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

சத்தீஸ்கரில் உள்ள தத்தெடுப்பு மையத்தில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக தாக்கப்பட்டு படுக்கையில் வீசப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Shocking Video : சத்தீஸ்கரில் உள்ள தத்தெடுப்பு மையத்தில் இரண்டு குழந்தைகள் கொடூரமாக தாக்கப்பட்டு படுக்கையில் வீசப்படும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொடூர தாக்குதல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் கான்கேர் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இங்கு மாநில அரசின் திட்டத்தின் கீழ் 6 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மையத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், அங்கு இளம்பெண் ஒருவர் குழந்தைகளை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சிறுமியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தூக்கி வீசுகிறார். அதன்பிறகு கன்னத்தில் அறைந்து சிறுமியைத் தூக்கி அருகில் உள்ள கட்டிலில் வீசி விட்டு மீண்டும் தாக்குகிறார். அந்த சமயத்தில் அருகில் இருந்த மற்றொரு சிறுமியையும் கட்டில் மீது தூக்கி வீசி அவரையும் தாக்குகிறார்.

வழக்குப்பதிவு

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் இந்த கொடூரச் செயலில் ஈடுபட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளுக்கு உரிய சிகிச்சையும் பாதுகாப்பும் வழங்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி தீவிர விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகளை கொடூரமாக தாக்கியது சீமா திவேதி என்று அடையாளம் காணப்பட்டள்ளது.

இதனை அடுத்து, சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தும் காப்பக மேலாளர் சீமான திவேதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கான்கர் மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்ந்த அதிகாரியையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். உத்தரவின்பேரில், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் சார்பல் சீமா திவேதி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

காரணம்

இதுகுறித்து சீமா திவேதி கூறுகையில், ”இந்த சம்பவம் ஒரு வருடத்திற்கு முன் நடந்ததாகவும், அப்போது தனது மனநிலை சரியில்லாமல் இருந்ததால் தான் இரண்டு குழந்தைகளை கொடூரமாக தாக்கியதாக விசாரணையில் கூறினார். மேலும், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து சாக்லெட்டுகளை இந்த குழந்தைகள் அடிக்கடி வாங்குவதால் இதுபோன்று நடந்துகொண்டேன்” என்று தெரிவித்தார்.  குழந்தைகளை அடித்ததற்கு மன்னிப்பு கோரியதோடு, அதன்பிறகு மையத்தில் இதுபோன்று நடக்கவில்லை என்று சீமா திவேதி கூறியுள்ளதாக தெரிகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget