மேலும் அறிய

எண்ணெய் ஊற்றி சப்பாத்திச் சுடச்சொன்னா... எச்சில் துப்பி சுட்டாராம்... ஒரு அப்பு அப்பி தூக்கிய போலீஸ்!

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட 59 வினாடி வீடியோ குறித்தும், ஏன் எச்சில் தொட்டு சப்பாத்தி செய்தீர்கள் என்பதும் குறித்தும் காவல் துறையினர் அந்த சமையல்காரரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உணவகத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட சமையல்காரரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தி சுடும் வீடியோ கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அந்த சமையல்காரர் சப்பாத்தி மாவில் எச்சில் துப்பி அதை அடுப்பின் மீது வைத்து சூடுகிறார். இதனை கடைக்கு சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீதும் சமையகாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார் வீடியோவில் உள்ள உணவகம் எந்த பகுதியை சேர்ந்தது என விசாரித்து வந்தனர்.

 

இறுதியாக அந்த உணவகம் டெல்லி அருகே அமைந்து உள்ள நகர் கோட்வாலி பகுதியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து வீடியோவில் இருந்த கடையை அடையாளம் கண்ட போலீசார் அங்கு சென்று விசாரித்து உள்ளனர். அப்போது, வீடியோவில் இருந்த தமீசுதீன் என்ற சமையகாரரை பார்த்த உத்தரப் பிரதேச போலீசார் கையோடு அவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று உள்ளனர்.

சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட 59 வினாடி வீடியோ குறித்தும், ஏன் எச்சில் தொட்டு சப்பாத்தி செய்தீர்கள் என்பது குறித்தும் காவல் துறையினர் அந்த சமையல்காரரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைதான சமையல்காரர் தமீசுத்தீன் பீகார் மாநிலம் கிஷான்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் என்றும் வருமானத்துக்காக உத்தரப் பிரதேசத்தில் தங்கி இருந்து உணவகத்தில் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் அளித்துள்ள தகவலில் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள பஞ்சவதி பகுதியின் அஹிம்சா வாதிகாவில் அமைந்து இருக்கும் சிக்கன் பாயிண்ட் என்ற உணவகத்தில் தமீசுத்தீன் சமையல்காரராக பணிபுரிந்து வருவதாகவும், தினசரி தந்தூரி ரொட்டி சுடுவது அவரது வேலை எனவும் தெரிவித்து உள்ளனர். இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கவுரவ் சிசோதியா, உணவகத்தை நடத்தி வரும் சதாப், சாஹில் மற்றும் தமீசுத்தீன் மீது காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.

இதற்கு முன்னதாக இதே காசியாபாத்திலும், டெல்லி, மீரட், குருகிராம், ஹாபூரிலும் எச்சில் தொட்டு சப்பாத்தி, ரொட்டி சுட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.

தலைப்பு செய்திகள்

Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஜூலை மாதம் வரி செலுத்துவோருக்கு அலர்ட்! இந்த 3 தேதிகளை மறந்தால் அபராதம் உறுதி.
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!
ஆதாரில் Email அப்டேட் செய்ய வேண்டுமா? டிசம்பர் 31 வரை இலவச வாய்ப்பு அறிவித்த UIDAI!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
SP Velumani: இபிஎஸ்-க்கு டாடா? அண்ணாமலைக்கு தூணாக மாறுகிறாரா எஸ்பி வேலுமணி?
TVK Government : ’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?-பரபரப்பு தகவல்கள்..!
’தவெக அரசை கவிழ்க்க திட்டம்’ சதி நடந்தது எப்படி?
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
Embed widget