Breaking News LIVE Today : சென்னையில் 1,158 தெருக்களில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
Breaking News LIVE Updates Today Tamil: தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

Background
Breaking News LIVE Today Tamil:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை மறுவாழ்வு முகாமில் உள்ள தமிழர்களுக்கும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பொதுமக்களுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 21 வகை பொருட்களான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும், ஒரு முழுக்கரும்பும் வழங்க உள்ளனர்.
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைப்பா? மத்திய அரசி விளக்கம்
மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
State Wise Omicron Cases: ஒமிக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம் (04.01.2022)
நாட்டில் ஒமிக்ரான் பரவல் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 23 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 1892 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 766 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில் 568 பேருக்கும், தில்லியில் 382 பேருக்கும், தமிழ்நாட்டில் 121 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்,100 பேர் ஒமிக்ரான் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்





















