பெரும் நிலச்சரிவு... ஆற்றிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்கள்... பதைபதைக்கும் வீடியோ
மணிப்பூர் நோனி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் உள்பட பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது.
![பெரும் நிலச்சரிவு... ஆற்றிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்கள்... பதைபதைக்கும் வீடியோ Bodies Pulled Out From Manipur River After Massive Landslide பெரும் நிலச்சரிவு... ஆற்றிலிருந்து வெளியே கொண்டு வரப்படும் உடல்கள்... பதைபதைக்கும் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/01/d357eae2330b55e193804d0a8eb41a31_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மணிப்பூர் நோனி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் உள்பட பலர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக அச்சம் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், ஆற்றில் கிடக்கும் உடல்களை மீட்கும் பணியில் அகழ்வாராய்ச்சி உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
#ManipurLandslide | Excavators being used to recover bodies from the river downstream of the Tupul yard railway construction site.
— NDTV (@ndtv) July 1, 2022
10 reported dead in the landslide that occurred near the construction site on June 29. pic.twitter.com/ZMdIwSoj8P
புதன்கிழமை இரவு துபுல் யார்டு ரயில்வே கட்டுமான தளத்திற்கு அருகிலுள்ள 107 பிராந்திய இராணுவ (TA) முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக 16 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ராணுவ வீரர்களும் அடங்குவர். இதையடுத்து, துப்புல் யார்டு ரயில்வே கட்டுமானப் பகுதியின் கீழ் ஆற்றில் இருந்து உடல்களை மீட்கும் பணியில் அகழ்வாராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஜூன் 29 அன்று கட்டுமானப் பகுதிக்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. பல ராணுவ வீரர்கள் உள்பட குறைந்தது 55 பேர் காணவில்லை. அவர்கள் இஜாய் ஆற்றின் அருகே சிக்கி இருப்பதாக அஞ்சப்படுகிறது. உடல்களை வெளியே எடுக்க அலுவலர்கள் ஆற்றின் கடினமான கீழ்நிலை நிலப்பரப்பில் அகழ்வாராய்ச்சிகளை நிறுத்தியுள்ளனர்.
மத்திய மற்றும் மாநில பேரிடர் படைகள் தவிர இந்திய ராணுவம், அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் டெரிடோரியல் ராணுவம் ஆகியவற்றால் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜிரிபாம் மாவட்டத்தில் இருந்து மாநிலத் தலைநகரான இம்பால் வரை கட்டப்படும் ரயில் பாதைக்கு பிராந்திய ராணுவம் பாதுகாப்பு அளித்து வருகிறது.
இடிபாடுகளில் புதைந்துள்ள பணியாளர்களை கண்டறிய ஒரு முழுமையான சுவர் ரேடார் நிலத்தின் கீழ் பொருத்தப்பட்டிருப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை, பிராந்திய இராணுவத்தின் 13 வீரர்களும், பொதுமக்களில் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணி நாள் முழுவதும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு ₹50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் பிரேன் சிங் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)