மேலும் அறிய

திருப்பதியில் சுத்தப்படுத்தும் பரிகாரம் விரைவில் அறிவிக்கிறார் ஆந்திரா சி.எம்.

300 ஆண்டுளாகத் தயாராகும் திருப்பதி லட்டு வரலாற்றில் மாட்டுக் கொழுப்பு கலப்பு பிரச்சினை, புதிய கடும் விதிமுறைகளுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது.

கோவில் பிரசாதமாக சர்வதேச பிரசித்திப் பெற்ற திருப்பதி லட்டு தற்போது மாட்டுக் கொழுப்பு பிரச்சினையால் பட்டிதொட்டியெங்கும் பேசுப் பொருளாகிவுள்ளது. இது, அது என பல காரணங்கள் கொடுக்கப்பட்டாலும், தற்போது லட்டு தயாரிப்பிலும், அதன் தர கண்காணிப்பிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விடை தேடும் வகையில், தற்போது TTD எனும் ஆங்கிலத்தில் சுருங்கமாக அழைக்கப்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக இறங்கியுள்ளது.

கோடிக்கணக்கான பக்தர்களின் மனம் புண்படும் வகையில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் குறித்து, பல்வேறு விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் சில தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யதார்த்தைச் சொல்ல வேண்டுமென்றால், பக்தர்களைவிட அரசியல்வாதிகள்தான், இந்தப் பிரச்சினையைப் பெரும் அக்கப்போராக மாற்றி வருகின்றனர் என்பது கண்கூடு.

தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஆண்டுதோறும் சுமார் 500 கோடி ரூபாய் வருவாய் தரக்கூடிய திருப்பதி லட்டு தயாரிப்பில்,  உச்சக்கட்ட தரக் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பதே, சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்த பக்தர்களின் கருத்தாக எதிரொலிக்கிறது. லட்டு வாங்கக் கொடுக்கும் பணம், தங்களுக்கு ஒரு பொருட்டல்ல எனக் கூறும் பக்தர்கள், கடவுளின் பிரசாதம் எனும் போது தரச் சோதனை என்பது கூடுதல் கவனத்துடன் இல்லாமல் இருந்தது ஏன் என கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலர் அரசியல்வாதிகளின் அக்கப்போருக்கு, எங்களின் நம்பிக்கையும் கடவுளின் பிரசாதமும் அலைக்கழிக்கப்படுகிறது எனக் குற்றம் சாட்டுகின்றனர். 

இதற்கிடையே, இந்தப் பிரச்சினையின் நதிமூலம், ரிஷி   மூலம் என அனைத்துக் கோணங்களிலும் ஓர் உண்மை கண்டறியும் அறிக்கையை, TTD தயாரித்து வருகிறது. அதன் நிர்வாக அதிகாரியான ஷியாமளா ராவ், அதை ஆந்திர முதலமைச்சரிடம் ஒப்படைக்க இருக்கிறார். அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள், குறிப்பாக சட்ட நடவடிக்கை, ஏன் கைது கூட செய்யலாம் எனக் கூறப்படுகிறது. 

அது மட்டுமல்ல, பண்டிதர்கள், ஆச்சார்யர்கள் உள்ளிட்டோரிடம் கலந்து பேசி, கோவிலுக்கும் லட்டு தயாரிக்கும் இடத்திலும் சுத்தப்படுத்தும் பணி நடத்துவதா அல்லது குடமுழுக்கு போன்றவற்றை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளாராம். எனவே, TTD விசாரணை அறிக்கை வந்தவுடன், அதற்குரிய பரிகார  நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு முதல்வர் சந்திரபாபு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தற்போது தயாராகும் லட்டுகள் அனைத்தும் எந்தவித கலப்படமும் இன்றி  தயாராகின்றன என TTD நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
சென்னை - புதுச்சேரி பயணம் இனி 2 மணிநேரம் மட்டுமே: போக்குவரத்துப் புரட்சியை விளக்கிய பிரதமர்
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
நீண்ட கால வலி...: பிரதமர் முன் ரங்கசாமி வைத்த முக்கிய கோரிக்கை! எதிர்பார்ப்பில் புதுச்சேரி மக்கள்...
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget