மேலும் அறிய

India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.

தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்:


India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..

இந்திய மக்களுக்கு தொலை தொடர்பு வசதிகளை அளிப்பதில், இந்தியா உலக அளவில் முதல் பத்து இடங்களில் உள்ளது. இந்தியாவில் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 83 கோடி எண்ணிக்கைக்கு மேல் உள்ளதாக  India Cellular and Electronics Association தெரிவித்துள்ளது.

வேளாண் துறை:


India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..

இந்தியாவில் வேளாண் துறை மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான மக்கள் வேளாண்மையை சார்ந்திருக்கிறார்கள்.  இந்தியாவில் உணவு தானியங்களின் நிகர உற்பத்தி 1950-களில் சுமார் 48 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது. ஆனால் 2021-22 ஆண்டில் 307.31 மில்லியன் டன்னாக உள்ளது. இந்த அதிகரிப்பானது 1950 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 மடங்கை விட அதிகமாகும். மேலும் அரிசி, கோதுமை மற்றும் பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில், இந்தியா தொடர்ந்து அதிகளவு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் உள்ளது.

சாலை இணைப்பு: 

இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்துடன்,தற்போதைய காலத்தை ஒப்பிடுகையில், இந்தியா உள்கட்டமைப்பில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேலும் வலுவான போக்குவரத்து உருவாக்குவதற்காக, மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. 1950-களில் சாலைகளின் நீளம் சுமார் 0.4 மில்லியன் கிலோ மீட்டர் என்ற அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது சுமார் 6.3 மில்லியன் கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வர்த்தகம்


India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..

1980-களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட்ட தாராளமயமாக்கல் செயல்முறை, 1990-களில் வேகம் பெற்றது. வர்த்தகத்தில் இறக்குமதி வரி போன்ற தடைகளைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தின் செயல்திறன் முடுக்கிவிடப்பட்டது. இன்று, உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க தடத்தை உருவாக்கியுள்ளது. 1950-51 ஆம் ஆண்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியின் மதிப்பு வெறும் 0.1 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, ஆனால் தற்போது, வணிகப் பொருட்களின் ஏற்றுமதி 400 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிகமாக உள்ளது. சேவைகள் ஏற்றுமதியில், தகவல் தொழில்நுட்ப சேவைகளின் ஏற்றுமதியில் இந்தியா முன்னணி இடத்திலும் உள்ளது. 

எழுத்தறிவு விகிதம்: 


India 75: சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் புள்ளி விவரங்கள்..

இந்தியா சுத்திரமடைந்த போது 1950-களில் எழுத்தறிவு விகிதமானது 18.3 விழுக்காடாக இருந்தது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நடவடிக்கைகளால், 1990-களில் எழுத்தறிவு விகிதமானது 52 விழுக்காடாக அதிகரித்தது. மேலும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 73% ஆக அதிகரித்தது. சமீபத்தில், நேஷனல் சர்வே ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022-ல் இந்தியாவின் எழுத்தறிவு விகிதம் 77.7  விழுக்காடாக  உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமை:

இந்தியாவை விட்டு ஆங்கிலேயர்கள் வெளியேறிய காலத்தில், 1950களில் வறுமைக்கு கீழ் உள்ளவர்களின் விழுக்காடு 60 விழுக்காடுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 1980 களில் 45 விழுக்காடு என்ற அளவுக்கு குறைந்தது. ஆனால் 2019 ஆண்டின்படி இந்தியாவில் வறுமை 10.2 விழுக்காடு அளவு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 

இந்தியா சுதந்திரம் அடைந்த போது, மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா, அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் உழைப்பால் பல மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனாலும், நாம் இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும்.

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget