மேலும் அறிய

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

லாக்டவுன் காலத்தில் அதிக மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதால் அதிகம் கண்பாதிப்பை சந்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது

லாக்டவுனில் கண்பார்வை பாதிப்புக்குள்ளாகும் இந்தியர்கள் :

கொரோனா பொது முடக்க காலத்தில் இந்தியர்கள் கண்கள் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மாணவர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வது, வீட்டில் இருந்தே பணிபுரிவோர் செல்போன், கணினி, மடிக்கணி ஆகிய மின்னணு சாதனங்களில் அதிக நேரம் செலவிடும் சூழல் உள்ளது. 

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

ஊரடங்கு காலத்தில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள வெளியில் செல்ல முடியாது என்பதால் ஆன்லைனில் படிக்கும் மாணவர்கள் தங்கள் வகுப்பு நேரம் முடிந்த பிறகும், வீட்டில் இருந்தே பணிபுரிவோர் தங்களது வேலை நேரம் முடிந்த பிறகும் தங்களது ஓய்வு நேரத்தில் தொலைக்காட்சிகள் பார்ப்பது, சமுக வலைதளங்களை பயன்படுத்துவது, கேம் விளையாடுவது என மின்னணு சாதனங்களிலேயே தங்களது ஓய்வு நேரத்தையும் செலவிட்டு வருகின்றனர். திரையில் செலவிடப்படும் நேரத்திற்கும் பார்வை இழப்பு விகிதத்திற்கும் தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தின் feel good contact நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

ஊரடங்கு காலத்தில் இந்தியாவில் உள்ள ஒளி விலகல், கண் சிவத்தல், கண் வறட்சி,  கண் அரிப்பு மற்றும் கண் புண் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. lancet global health, உலக சுகாதார அமைப்பு, ஸ்டீண்டைன் ட்ராக்டர் டேட்டா ரிப்போர்ட்டல் ஆகிய தரவுகளின் அடிப்படையில் உலக அளவில் மின்னணு சாதனங்களில் செலவிடும் போது அதிகம் பேருக்கு கண்பார்வை பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் தினமும் மின்னணு சாதனங்களை உபயோகிக்கும் நபர்களின் சராசரி நேரம் 6.36 மணி நேரமாகவும் மின்னணு சாதனங்களில் செலவிடும் நபர்களில் 22.7% பேருக்கு கண்பார்வை பாதிப்பும் பதிவாகி உள்ளது . இதனால் 28 கோடி இந்தியர்களுக்கு கண்பார்வை பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

லாக்டவுனில் இத்தனை கோடி இந்தியர்களுக்கு கண் பார்வை பாதிப்பா? ஆய்வில் அதிர்ச்சிச் தகவல்..

இந்தியாவை தவிர்த்த மற்ற நாடுகளில் பாதிப்பு விகிதம்

தென்னாப்பிரிக்கா- ஒரு நபர்  சராசரியாக 10.06 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 21.6% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

இந்தோனேஷியா-  ஒரு நபர்  சராசரியாக 8.52 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 15.5% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

தாய்லாந்து- ஒரு நபர்  சராசரியாக 8.44 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 15.2% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

வியட்நாம்- ஒரு நபர்  சராசரியாக 6.47 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.9% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

மலேஷியா- ஒரு நபர்  சராசரியாக 9.17 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.4% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

ஃபிலிப்பைன்ஸ்- ஒரு நபர்  சராசரியாக 10.56 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.3% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

சீனா- ஒரு நபர்  சராசரியாக 5.22 மணிநேரங்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் 14.1% பேருக்கு கண்பார்வை பாதிப்பு

கண்களை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரைகள் என்ன?

  • வைட்டமின் C, வைட்டமின் E, துத்தநாகம், ஒமேகா-3  சத்துக்கள் அடங்கிய உணவை அதிகம் எடுத்துக் கொள்வது அவசியம்
  • மின்னணு திரையில் வேலை பார்த்த பிறகு ஒருமணி நேர இடைவெளிக்கு பிறகு தூங்க செல்ல வேண்டும்
  • எல்லா மின்னணு சாதனங்களையும் குறைவான ஒளி உமிழ்வை கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்
  • அறையை ஒளி மிகுந்ததாக மாற்றி இருட்டில் மிண்ணனு பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
  • திறந்த வெளியில் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் திரையில் இருந்து பிரதிபலிப்பதால் கண்களை நேரடியாக தாக்கி கார்னியாவில் சேதத்தை ஏற்படுத்தும்
  • மின்னணு திரையை மேலே பார்க்காமல் சற்று கீழே பார்க்கும் வகையில் வைக்க வேண்டும்
  • 6 மாதங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவரை சந்தித்து கண் சோதனையை மேற்கொள்வது அவசியம்
  • ஓய்வு நேரத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை குறைத்து வீட்டின் வெளியே விளையாடுவயோ, உரையாடுவதையோ வழக்கமாக்கி கொள்ளுங்கள்
  • ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும், 20 அடி தூரத்தில் உள்ள எந்தவொரு பொருளையும் 20 வினாடிகளுக்கு மேல் பார்ப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள், இது கண்களின் சிரமத்தை குறைக்கும்.

 

தலைப்பு செய்திகள்

Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Embed widget