மேலும் அறிய

Jayalalithaa: ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி: அதிமுக தொண்டர்கள் உற்சாகம்.. தேர்தல் நேரத்தில் மாஸ் சம்பவம்!

நான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம், இன்றும் கூட தமிழக மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன் என ஜெயலலிதாவை பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியுள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி வாயிலாக மன் கி மாத் (மக்களின் குரல்) எனப்படும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இப்படியான நிலையில் பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அவர் உரை நிகழ்த்தினார். 

AI உச்சி மாநாடு குறித்து பெருமிதம்

பிரதமர் மோடியின் 131வது எபிசோடில் அவர் தொழில்நுட்பம், சமூக விழிப்புணர்வு மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் முன்னேற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026 பற்றி பேசிய அவர், அங்கு நான் உலக தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளை சந்தித்தேன். அந்நிகழ்ச்சியில் இந்தியா மூன்று 'மேட் இன் இந்தியா' செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியது என குறிப்பிட்டார். 

எதிர்காலத்தில் உலகம் இந்த ஏஐ சக்தியை எப்படி பயன்படுத்தும் என்பதற்கு இந்த உச்சி மாநாடு ஒரு திருப்புமுனையாகும். இந்த கண்காட்சியில் என்னை இரண்டு விஷயங்கள் கவர்ந்தது. ஒன்று அமுல் அரங்கில் ஏஐ கருவிகள் உதவியுடன் விலங்குகள் சிகிச்சை, கால்நடைகளை பராமரிப்பது, பால் தொடர்பான பணிகள் ஆகியவையாகும். 

இரண்டாவதாக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பானது. நமது பண்டைய வேதங்கள்,  கையெழுத்துப் பிரதிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்றன என்பதைக் கண்டு உலகம் முழுவதிலுமிருந்து வந்த தலைவர்கள் ஆச்சரியப்பட்டனர் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,   ஹோலியின் போது அல்லது பிற பண்டிகைகளின் போது கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை நமது சந்தைகளில் நுழைந்துள்ளன. இந்த தயாரிப்புகளை விலக்கி வைக்கவும். உள்ளூர் பொருட்களைத் தேர்வு செய்யவும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு புகழாரம்

இதனையடுத்து ஜெயலலிதா பற்றி பேசிய அவர், “நம் நாட்டில் சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் போன்றவர்களுக்கு எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா அம்மாவுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. நான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம், இன்றும் கூட தமிழக மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டுவருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது என குறிப்பிட்டார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விரைவில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பரப்புரை மேற்கொள்ள வருகை தரவுள்ள நிலையில் ஜெயலலிதா பற்றிய அவரின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget