மேலும் அறிய

மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்க கூடிய 5 முதல் 13 வயது உடைய மாணவ மாணவிகள் 39 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள்  கூறுகையில் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக நார்த்தம் பழத்தை பயன்படுத்தி சாதம் தயாரித்து கொடுத்ததாகவும், இந்த பள்ளியில் இயங்கக்கூடிய சத்துணவு கூடத்திற்கு மூன்று நாட்களாக முட்டை வரவில்லை என்றும், எனவே ஊழியர்கள் பழைய இருப்பு உள்ள முட்டையை மாணவர்களுக்கு கொடுத்ததால் தான் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். 


மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் மதிய உணவு சாப்பிட்டு  கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 மாணவ மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். மேலும் கண்டியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவினை பரிசோதனைக்காக  உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதுடன், பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்த இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்து இருந்தாலும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 39 மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் விசாரணை நடத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாணவர்கள் சாப்பிட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்த பின்னர் இந்த விஷயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
உள் இணைப்பு சாலை பணிகளை எப்போ தொடங்குவீங்க? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு
Ind vs Zim: என்னப்பா இந்த ரெக்கார்ட் போதுமா! ஜிம்பாப்வேயை துவைத்து இந்திய அணி படைத்த சாதனைகள்
Ind vs Zim: என்னப்பா இந்த ரெக்கார்ட் போதுமா! ஜிம்பாப்வேயை துவைத்து இந்திய அணி படைத்த சாதனைகள்
EPS Slams DMK Govt.: என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
மதுரையில் இனி சனி, ஞாயிறும் வரி செலுத்தலாம்... கடைசி தேதி நெருங்குவதால் உடனே செலுத்துங்கள்!
மதுரையில் இனி சனி, ஞாயிறும் வரி செலுத்தலாம்... கடைசி தேதி நெருங்குவதால் உடனே செலுத்துங்கள்!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Rain: வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
வெயில் பொளக்குதேன்னு பயப்படாதீங்க.? இதோ மழை வந்துட்டே இருக்கு; வானிலை மையம் குட் நியூஸ்.!
EPS Slams DMK Govt.: என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
என்னா சார் இப்படி கேட்டுப்புட்டீங்க.?! SI தேர்வு சர்ச்சையில் திமுக அரசை விளாசிய இபிஎஸ்
T20 WC IND Vs ZIM: டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
டி20 உலகக் கோப்பை; அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா.? ஜிம்பாப்வேயுடன் இந்தியா முதலில் பேட்டிங்
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
பிரம்மாண்ட அறிவியல் திருவிழா! மாணவர்கள் பங்கேற்க அழைப்பு! போட்டி, பரிசுகள்.. விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்!
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
Maruti Baleno vs Tata Altroz: மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
மாருதி பலேனோவா.? டாடா அல்ட்ராஸா.? எத வாங்குறதுன்னு குழப்பமா இருக்கா.? இத படிச்சா தெளிஞ்சுடும்
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
அப்பாடா... ஒரு வழியாக திமுகவுடன் நாளை காங். பேச்சுவார்த்தை- காத்திருந்ததற்கு பலன் கிடைக்குமா..?
Galaxy S26 Ultra First Impressions: ஹீரோவான பிரைவசி டிஸ்ப்ளே; சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா எப்படி இருக்கிறது.? முதல் பார்வை இதோ
ஹீரோவான பிரைவசி டிஸ்ப்ளே; சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா எப்படி இருக்கிறது.? முதல் பார்வை இதோ
Embed widget