மேலும் அறிய

மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்க கூடிய 5 முதல் 13 வயது உடைய மாணவ மாணவிகள் 39 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதால் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள்  கூறுகையில் எலுமிச்சை பழத்திற்கு பதிலாக நார்த்தம் பழத்தை பயன்படுத்தி சாதம் தயாரித்து கொடுத்ததாகவும், இந்த பள்ளியில் இயங்கக்கூடிய சத்துணவு கூடத்திற்கு மூன்று நாட்களாக முட்டை வரவில்லை என்றும், எனவே ஊழியர்கள் பழைய இருப்பு உள்ள முட்டையை மாணவர்களுக்கு கொடுத்ததால் தான் மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறுகின்றனர். 


மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் மதிய உணவு சாப்பிட்டு  கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 39 மாணவ மாணவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார். மேலும் கண்டியூர் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவினை பரிசோதனைக்காக  உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பி வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதுடன், பள்ளி மாணவர்கள் மதிய உணவு சாப்பிட்டு விட்டு மயக்கமடைந்த இந்த விவகாரத்தில் எங்கு தவறு நடந்து இருந்தாலும் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கண்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 39 மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அப்பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


மதிய உணவு சாப்பிட்ட 39 அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் - கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதி

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலச்சந்திரன் தலைமையில் விசாரணை நடத்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கூறிய புகாரின் அடிப்படையில் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு ஊழியர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மாணவர்கள் சாப்பிட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக சமர்ப்பித்த பின்னர் இந்த விஷயத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!
தீராத மக்கள் பிரச்சினைகள்.. குவியும் மனுக்கள்: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பான திங்கட்கிழமை!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!
தளபதி விஜயின் கல்விக் கரம்: எம்.எல்.ஏ.வின் 2 மாத ஊதியத்தில் மாணவர் கனவுகள் நனவாகிறது!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Automatic CNG Cars: ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
ரூ.10 லட்சத்துல ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கணுமா.? அப்போ இந்த லிஸ்ட்டுல இருந்து செலெக்ட் பண்ணுங்க
Classic 350 on EMI: மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
மாஸான ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 வாங்க ஆசையா.? ரூ.10,000 முன்பணம் போதும்; மாத EMI எவ்வளவு வரும்.?
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Embed widget