மேலும் அறிய

கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.

கோவை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் குளத்தில் குளித்து பல மணிநேரம் விளையாடின. யானைகளை பட்டாசு வீசி வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் போலுவம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.


கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

இந்நிலையில் செம்மேடு அருகேயுள்ள முட்டத்து வயல் என்ற குளத்தில் இரண்டு ஆண் காட்டு யானைகள் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கூடியிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்திய வனத்துறையினர், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தனர். யானைகள் பல மணிநேரமாக குளத்தில் குளித்து விளையாடின. இரண்டு யானைகளும் அந்த குளத்தில் இருக்கும் திட்டு பகுதிக்கு செல்வதும், மீண்டும் திட்டில் இருந்து இறங்கி தண்ணீரில் குளித்துவிட்டு மீண்டும் திட்டுக்கு செல்வதுமாக இருந்தன. இப்படி தொடர்ந்து பல மணிநேரம் யானைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தன.


கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் வெளியே வந்துள்ளன. காட்டை விட்டு காட்டு யானைகள் வெளியே வர முயற்சித்தபோது, வனப் பணியாளர்கள் மீண்டும் காட்டுக்குள் பட்டாசுகளை வீசி திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற இரண்டு யானைகளும், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டில் இருந்து வெளியே வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வெளியேறி குளத்திற்கு வந்துள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளுக்காக,  3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர். மேலும் யானைகளை ட்ரோன் மூலமும் வனத்துறையினர் கண்காணித்தனர். குளத்தில் நல்ல தண்ணீர் இருப்பதால் யானைகள் குளித்து விளையாடி வருவதாகவும், குளத்தில் சகதி ஏதும் இல்லை எனவும் கூறிய வனத்துறையினர், யானைகளை பாதுகாப்பாகக் காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பிற்பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து பட்டாசுகளை வீசியும், சத்தம் எழுப்பியும்  இரண்டு யானைகளையும் குளத்தில் இருந்து வெளியேற்றினர். குளத்தில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகளும் வனப்பகுதியை நோக்கிச் சென்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
லட்சங்கள் செலவில் கட்டிய புதிய பஸ் ஸ்டாண்ட்… திறந்தவெளி கழிப்பிடமாக மாற்றிய ஊழியர்கள்.?
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
உறவினர் வீட்டில் நடந்த கொடூரம்… 2 வயது குழந்தை பாலியல் வழக்கில் 20 ஆண்டு சிறை...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவையை சுற்றி ‘டிஜிட்டல் பாதுகாப்பு வளையம்’… 1500 கேமராக்கள் ஒரே மையத்தில் இணைப்பு...
கோவை பாஜக மையக்குழு கூட்டம்... தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த முக்கிய எச்சரிக்கை...
கோவை பாஜக மையக்குழு கூட்டம்... தமிழக அரசுக்கு தமிழிசை விடுத்த முக்கிய எச்சரிக்கை...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Officers Transfer: வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
வணிக வரித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்; பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
தவெக ஆட்சியில் என்னென்ன செய்தோம்? 60 நாள் மட்டும் டைம் கொடுங்க- தேதி குறித்த ஆதவ்!
Trump Vs Iran: “ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
“ஹார்முஸ் முழுக்க என் கன்ட்ரோல்ல இருக்கு, ஈரான் அணு ஆயுதம் செய்ய விட மாட்டேன்“ - ட்ரம்ப் சூளுரை
US Iran War: செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
செறிவூட்டப்பட்ட யுரேனியம்; மொஜ்தபா முக்கிய உத்தரவு; சீறப்போகும் ட்ரம்ப்; ஈரான் கதை முடிந்ததா.?!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்.. அதிருப்தி அதிமுக எம்எல்ஏ-க்களை அரவணைக்கத் தயாரான இபிஎஸ்!
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
RRB Recruitment: ஆர்ஆர்பி வேலைவாய்ப்பு: 6,565 காலிப் பணியிடங்கள்- ஜூன் 30 முதல் விண்ணப்பிக்கலாம்
Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?
Samsung Rollable Phone: மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
மொபைல் சந்தையை கதறவிட தயாராகும் சாம்சங்; ஸ்லைட், சுருட்டி வைக்கும் டிஸ்ப்ளே மாடலுக்கு காப்புரிமை
Embed widget