மேலும் அறிய

கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.

கோவை அருகே வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானைகள் குளத்தில் குளித்து பல மணிநேரம் விளையாடின. யானைகளை பட்டாசு வீசி வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்கு விரட்டினர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் போலுவம்பட்டி வனச்சரகம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக விளங்குகிறது. இரவு நேரங்களில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் நுழைவது வழக்கம். இதனிடையே ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், வன விலங்குகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றன.


கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

இந்நிலையில் செம்மேடு அருகேயுள்ள முட்டத்து வயல் என்ற குளத்தில் இரண்டு ஆண் காட்டு யானைகள் நீரில் இறங்கி விளையாடிக் கொண்டிருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கூடியிருந்த மக்களை உடனடியாக அப்புறப்படுத்திய வனத்துறையினர், பொதுமக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரித்தனர். யானைகள் பல மணிநேரமாக குளத்தில் குளித்து விளையாடின. இரண்டு யானைகளும் அந்த குளத்தில் இருக்கும் திட்டு பகுதிக்கு செல்வதும், மீண்டும் திட்டில் இருந்து இறங்கி தண்ணீரில் குளித்துவிட்டு மீண்டும் திட்டுக்கு செல்வதுமாக இருந்தன. இப்படி தொடர்ந்து பல மணிநேரம் யானைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்தன.


கோவை : குளத்தில் குளித்து விளையாடிய காட்டு யானைகள் : காட்டுக்குள் அனுப்பிய வனத்துறையினரின் முயற்சி என்ன?

நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் வெளியே வந்துள்ளன. காட்டை விட்டு காட்டு யானைகள் வெளியே வர முயற்சித்தபோது, வனப் பணியாளர்கள் மீண்டும் காட்டுக்குள் பட்டாசுகளை வீசி திருப்பி அனுப்பினார்கள். இதையடுத்து வனப்பகுதிக்குள் சென்ற இரண்டு யானைகளும், தாணிகண்டி பழங்குடியின குடியிருப்பு வழியாக காப்புக் காட்டில் இருந்து வெளியே வந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் வெளியேறி குளத்திற்கு வந்துள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளுக்காக,  3 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர். மேலும் யானைகளை ட்ரோன் மூலமும் வனத்துறையினர் கண்காணித்தனர். குளத்தில் நல்ல தண்ணீர் இருப்பதால் யானைகள் குளித்து விளையாடி வருவதாகவும், குளத்தில் சகதி ஏதும் இல்லை எனவும் கூறிய வனத்துறையினர், யானைகளை பாதுகாப்பாகக் காட்டுக்குள் அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பிற்பகலில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் வனப்பகுதிக்குள் யானைகளை விரட்ட வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து பட்டாசுகளை வீசியும், சத்தம் எழுப்பியும்  இரண்டு யானைகளையும் குளத்தில் இருந்து வெளியேற்றினர். குளத்தில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகளும் வனப்பகுதியை நோக்கிச் சென்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget