மேலும் அறிய

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - வானதி சீனிவாசன் கண்டனம்

”தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்”

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”காரைக்குடியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்தது. இதனை கேட்டதும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் பா.ஜ.க., தமிழகத்தில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாத சக்திகளின் வேலையாகக்கூட இது இருக்கலாம்.

கோவை மாநகரம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்ட பகுதி. 1998 பிப்ரவரி 14-ம் தேதி, பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொல்வதற்காக, கோவை மாநகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பையும், 1997 நவம்பர் 29-ம் தேதி, போக்குவரத்து காவலர் செல்வராஜ்  கொல்லப்பட்டதை தொடர்ந்து, கோவை மாநகரில் நடந்த கலவரத்தையும் யாராலும் மறக்க முடியாது. இவை தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள். இந்த இரு கொடூரங்களும் நடந்தபோது தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இந்தப் பின்னணியில் தான், பா.ஜ.க. அலுவலகத்தின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பார்க்க வேண்டும். 

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு https://t.co/3D2Xswsf4S pic.twitter.com/2dhefO0ASS

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 23, 2022

">

இதுகுறித்து தமிழக காவல் துறை முழுமையான, நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி, விசாரணையை முடுக்கி விட வேண்டும். நாடு முழுவதும் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொண்டு காவல் துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அமைதிக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குகிறது.

ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்களிடம் தான் அரசு கருணை காட்ட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை கொல்லத் துணியும், பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
Hyundai Creta: எஸ்யுவிக்களின் மகாராஜா..! நாளொன்றிற்கு 550 யூனிட்கள், 2 லட்சத்தை தாண்டிய ஆண்டு விற்பனை
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Embed widget