மேலும் அறிய

கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு - வானதி சீனிவாசன் கண்டனம்

”தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்”

பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”காரைக்குடியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் மீது, பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தகவல் கிடைத்தது. இதனை கேட்டதும் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாடுபட்டு வரும் பா.ஜ.க., தமிழகத்தில் வளர்ந்து வருவதை பொறுக்க முடியாத சக்திகளின் வேலையாகக்கூட இது இருக்கலாம்.

கோவை மாநகரம் பல பத்தாண்டுகளுக்கு முன்பே, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் குறிவைக்கப்பட்ட பகுதி. 1998 பிப்ரவரி 14-ம் தேதி, பா.ஜ.க. தலைவர் அத்வானியை கொல்வதற்காக, கோவை மாநகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பையும், 1997 நவம்பர் 29-ம் தேதி, போக்குவரத்து காவலர் செல்வராஜ்  கொல்லப்பட்டதை தொடர்ந்து, கோவை மாநகரில் நடந்த கலவரத்தையும் யாராலும் மறக்க முடியாது. இவை தமிழக வரலாற்றின் கருப்பு பக்கங்கள். இந்த இரு கொடூரங்களும் நடந்தபோது தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. இந்தப் பின்னணியில் தான், பா.ஜ.க. அலுவலகத்தின் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பார்க்க வேண்டும். 

கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு https://t.co/3D2Xswsf4S pic.twitter.com/2dhefO0ASS

— Vanathi Srinivasan (@VanathiBJP) September 23, 2022

">

இதுகுறித்து தமிழக காவல் துறை முழுமையான, நியாயமான விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி, விசாரணையை முடுக்கி விட வேண்டும். நாடு முழுவதும் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நடந்திருப்பதை கவனத்தில் கொண்டு காவல் துறை விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் அமைதிக்கு கேடு விளைவிக்கும் பயங்கரவாதம் தலைதூக்குகிறது.

ஜனநாயக வழியில் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பவர்களிடம் தான் அரசு கருணை காட்ட வேண்டுமே தவிர, அப்பாவி மக்களை கொல்லத் துணியும், பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தமிழகத்தின் அமைதிக்கு ஏதாவது கேடு நேர்ந்தால், அதற்கு ஆளும் தி.மு.க. அரசு தான் பொறுப்பு என்பதையும், அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget