மேலும் அறிய

Udayanithi Stalin: ’நீட் தேர்வை எதிர்த்து உண்மையாக போராடுவது திமுக தான்’ - உதயநிதி ஸ்டாலின்

"நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினோம். தற்போது வரை உண்மையாக போராடி வருகின்றோம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என உண்மையாக போராடி வருவதாகவும், தற்போது வரை 27 லட்சம் நீட் விலக்கு கையெழுத்து பெற்றுள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் நடைபெற்ற இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:

ஈரோடு மாவட்டம் சரளையில் திமுக மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் மாநாட்டு நிதி மற்றும் தேர்தல் நிதிகளை வழங்கினர். பின்னர் இளைஞரணியினர் முன்னிலையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினோம். தற்போது வரை உண்மையாக போராடி வருகின்றோம்.

நீட் பிரச்சனை உதயநிதியின் பிரச்சினை இல்லை. மாணவர்களின் பிரச்சினை என்றவர், கலைஞர் தான் நுழைவு தேர்வை ரத்து செய்தார் என்றார். இன்றைய காலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையம் வைத்து லட்ச லட்சமாக சம்பாதித்து வருகின்றனர். இதுவரை நீட் தேர்வால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நீட் தேர்வு எதிர்ப்பு கையெழுத்து முதல்வரிடம் வழங்கி மத்திய அரசிடம் வழங்கப்படும் என்றார்.

கையெழுத்து இயக்கம்:

இதுவரை இணையதளம் வழியாக 16 லட்சமும் போஸ்ட் கார்ட் மூலம் 11லட்சம் நீட் எதிர்ப்பு கையெழுத்து பெற்றுள்ளோம் என தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி நீங்களும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதால் கையெழுத்து இயக்கத்தில் பங்கு பெறுங்கள் என்றேன். அதற்கு திமுக நடத்தும் நாடகம் என்றார். உடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா காலை வாரியது எடப்பாடி பழனிச்சாமி தான் நாடகக்காரர் என்றார்.

மோடிக்கு முதல்வர் மற்றும் எனது நினைப்பு தான் என்பதால், ராஜஸ்தானில் என்னைப்பற்றி பேசியுள்ளார். நான் சமூக நீதி பற்றி பேசினேன். ஆனால் பேசாததை பேசியதாக ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் தெரியும் படி செய்துள்ளனர்‌ என்றார். திமுக ஆட்சிக்கு வந்தால், தமிழகம் கலைஞரின் குடும்பம் தான். தமிழகத்தில் உள்ள அனைவரும் கொள்கை வாரிசு தான் என்றார். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை மாற்றுவேன் என்று சொன்னவர் இந்தியாவின் பெயரை மாற்றியதற்கு பாராட்ட வேண்டும்.

மருத்துவ காப்பீட்டில் ஊழல்:

ரமணா படம் போல ஒன்றிய அரசு நிஜத்தில் 88 ஆயிரம் இறந்தவருக்கு மருத்து காப்பீடு செய்து ஊழலில் ஈடுபட்டுள்ளது என குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், சுத்தியல் பூட்டை தலையில் அடித்து திறக்க முயற்சித்தும் முடியாமல் சாவி சுலபமாக திறந்தது. இதற்கு சுத்தியிடம் சாவி சொல்லியது பூட்டின் இதயத்தை தொட்டேன் என்றது. இதனை இன்றைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சாவி திராவிட அரசு, பூட்டு தமிழ்நாடு, சுத்தியலாக ஒன்றிய அரசு உள்ளது‌ என சிறு கதையை கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
Masi Magam 2025: நாளை மாசிமகம்; புண்ணிய நதிகளில் ஏன் நீராட வேண்டும்? எந்த தெய்வத்தை வணங்கினால் என்ன நன்மை?
"கடன் பிரச்னை தாங்க முடில" பெற்ற குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தம்பதி.. கொடூரம்!
Embed widget