மேலும் அறிய

நீலகிரி : அகப்படாத ஆட்கொல்லி புலி ; ஒன்பதாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை..!

டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மனித - வனவிலங்கு மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக குடியிருப்புகளை ஒட்டிய‌ பகுதிகளில் யானை மற்றும் புலிகளின் நடமாட்டங்கள்‌ அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை புலி தாக்கியது. இதில் கடுமையான‌ காயத்துடன் ஊட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


நீலகிரி : அகப்படாத ஆட்கொல்லி புலி ; ஒன்பதாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை..!

தொடர்ந்து மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கி கொல்லும் அபாயம் இருப்பதால் உள்ளூர் மக்கள் புலியை பிடிக்கக் கோரி, தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனால், அந்தப் புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முயற்சித்து வந்தனர். புலியை பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தனர். 

ஒரு வார காலமாக தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த டி 23 புலி, சிங்காரா பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப் பகுதியில் குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரது தலை பகுதியை தின்ற புலி வனத் துறையிடம் இருந்து தப்பியது. இதையடுத்து மசினகுடி பகுதியில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சாலையில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார்.


நீலகிரி : அகப்படாத ஆட்கொல்லி புலி ; ஒன்பதாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை..!

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புலியின் நடமாட்டத்தை கண்டறிய அதவை என்ற சிப்பிப்பாறை நாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ட்ரோன் மூலமும் புலியின் இருப்பிடத்தை அறிய வனத்துறையினர் முயற்சி செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது. ஒன்பதாவது நாளாக வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 CSK vs LSG: ஃபினிஷர் தோனி இஸ் பேக்.. மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சிஎஸ்கே!
IPL 2025 CSK vs LSG: ஃபினிஷர் தோனி இஸ் பேக்.. மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சிஎஸ்கே!
Good Bad Ugly: ரெட் டிராகன் அஜித்தின் அடங்காத வசூல்! 150 கோடி ரூபாயை எட்டிய குட் பேட் அக்லி!
Good Bad Ugly: ரெட் டிராகன் அஜித்தின் அடங்காத வசூல்! 150 கோடி ரூபாயை எட்டிய குட் பேட் அக்லி!
EPS Plan: அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
”பதவிக்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை” எடப்பாடியை சொன்னாரா ஜெயக்குமார்..?
”பதவிக்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை” எடப்பாடியை சொன்னாரா ஜெயக்குமார்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai Slams DMK | காவலரை தாக்கிய விவகாரம் எங்கிருந்து துணிச்சல் வந்தது?  திமுகவை விளாசிய அ.மலைTVK Vijay: தேறாத நடிகர் விஜய்! படபிடிப்பா? மக்களா? புலம்பி தவிக்கும் தவெகவினர்Dhruv Vikram Anupama Parameswaran Dating | துருவ்-அனுபமா காதல்?வைரலாகும் LIPLOCK போட்டோ PRIVATE-ஆன SPOTIFY ப்ளேலிஸ்ட்RB Udhayakumar vs EPS : மேடையில் அசிங்கப்படுத்திய EPS!கோபத்தின் உச்சியில் RB உதயகுமார்  சுக்குநூறாய் உடைந்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 CSK vs LSG: ஃபினிஷர் தோனி இஸ் பேக்.. மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சிஎஸ்கே!
IPL 2025 CSK vs LSG: ஃபினிஷர் தோனி இஸ் பேக்.. மீண்டும் வெற்றிக் கணக்கைத் தொடங்கிய சிஎஸ்கே!
Good Bad Ugly: ரெட் டிராகன் அஜித்தின் அடங்காத வசூல்! 150 கோடி ரூபாயை எட்டிய குட் பேட் அக்லி!
Good Bad Ugly: ரெட் டிராகன் அஜித்தின் அடங்காத வசூல்! 150 கோடி ரூபாயை எட்டிய குட் பேட் அக்லி!
EPS Plan: அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?
”பதவிக்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை” எடப்பாடியை சொன்னாரா ஜெயக்குமார்..?
”பதவிக்காக நான் யார் வீட்டு வாசலிலும் நிற்கவில்லை” எடப்பாடியை சொன்னாரா ஜெயக்குமார்..?
Jayakumar: “நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
“நான் தன்மான சிங்கம், பதவி என்பது எனக்கு ஒரு கர்ச்சீஃப் மாதிரி“ ஜெயக்குமார் ஆவேசம்...
RTE Schools Admission: தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கை; விண்ணப்ப பதிவு எப்போது?- வெளியான தகவல்!
RTE Schools Admission: தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கை; விண்ணப்ப பதிவு எப்போது?- வெளியான தகவல்!
Annamalai: ’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
’’போதும்டா சாமி’’ பாபா ரஜினி வழியில் அண்ணாமலை- விரக்தியில் ஆதரவாளர்கள்!
Karthigai Deepam: அட்வைஸ் பண்ண பரமேஸ்வரி! கடுப்பாகும் ரேவதி! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: அட்வைஸ் பண்ண பரமேஸ்வரி! கடுப்பாகும் ரேவதி! கார்த்திகை தீபத்தில் இன்று?
Embed widget