வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு திடீர் தடை! கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் கனமழை காரணமாகக் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மீகத் தலமாகவும், தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, இன்று முதல் மலையேறத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நிலவும் கனமழை காரணமாகக் கோவை மாவட்ட நிர்வாகம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தற்போது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, வெள்ளியங்கிரி மலைப்பாதைகளில் பலத்த காற்றும், கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழையினால் மலைப்பாதைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதாலும், ஏழாவது மலையில் நிலவும் அதீத குளிர்காற்று மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாலும், பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து இந்தத் தடையை விதித்துள்ளன
மறு உத்தரவு வரும் வரை தடைஇந்தத் தடையானது இன்று மே 13 முதல் அமலுக்கு வருகிறது. பொதுவாகச் சித்ரா பவுர்ணமி சீசன் முடிந்த பிறகும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி வரும் நிலையில், இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு அபாயம் மற்றும் வனவிலங்குகளின் நடமாட்டம் மழைக் காலங்களில் அதிகமாக இருக்கும் என்பதால், மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் எவரும் பூண்டி அடிவாரத்தைத் தாண்டி மேலே செல்ல அனுமதி இல்லை என வனத்துறை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
பருவமழை காலங்களில் செங்குத்தான மலைப்பாதைகளில் ஏறுவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றத்தைத் தவிர்க்கமுன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைபவர்கள் மீது வனத்துறை சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.வானிலை சீராகி, வனத்துறை ஆய்வு செய்த பின்னரே மீண்டும் மலையேற அனுமதி வழங்கப்படும். அதுவரை அடிவாரத்தில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி உண்டு எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















