“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி; மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” என கோவையில் நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர்கள் சிவக்குமார் மற்றும் சத்யராஜ் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை பகிர்ந்தனர்.
அப்போது நடிகர் சிவக்குமார் பேசுகையில், "என்னுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணம் ஒழுங்கான வாழ்க்கை முறை தான். 1958-ஆம் ஆண்டு காபி, டீ குடிக்காமல் வாழ்ந்து வருகிறேன்." மேலும், “இன்றைய காலத்தில் குடும்பத்தினர் அனைவரும் செல்போனில் மூழ்கி தனித்தனியாக இருக்கிறார்கள். செல்போனை விட்டு குடும்பத்துடன் அமர்ந்து பேச வேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவது மனநலத்திற்கு நல்லது. எனக்கு தற்போது 85 வயது. தினமும் நண்பர்களுடன் நீண்ட நேரம் பேசுவேன்” என்று தெரிவித்தார்.
அரசியல் குறித்து பேசிய அவர், “விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி. மாற்றம் வேண்டும் என்பதற்காக தி.மு.க., அ.தி.மு.க வேண்டாம் என்ற மனநிலையிலேயே மக்கள் உள்ளனர். நடிகர் சத்தியராஜ் பேசுகையில், “உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிகவும் அவசியம். மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். போதை பழக்கத்திலிருந்து இளைஞர்கள் விலக வேண்டும்” என்று கூறினார். மேலும், “விஜய் அரசு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறியது பாராட்டுக்குரியது” என்றும் கூறினார்.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















