காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
இரண்டாண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய புனே கார் விபத்து வழக்கில் கைதான சிறுவனின் தந்தை, கழுத்தில் பணமாலையுடன் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த 2024-ல் புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ஷ் காரில் அதிவேகமாக, பைக் மீது மோதியதில் இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.
இதில், சிறுவன் மைனர் என்பதால் சிறார் நீதி வாரியம், சாலைப் பாதுகாப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதுவது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேவேளையில், சிறுவன் மது அருந்தியதற்கான சோதனையில், மருத்துவர்களுக்கு லஞ்சம் வழங்கி அவரின் தாயாரின் ரத்த மாதிரியை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
அதில் சிறுவனின் தாய், தந்தை இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 22-ம் தேதி சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில், ஜாமீன் கிடைத்ததைக் கொண்டாடும் வகையில் சிறுவனின் தந்தை விஷால் அகர்வால் கழுத்தில் பணமாலையுடன் தனது மகன் மற்றும் மனைவியுடன் நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னொருபக்கம் அந்த வீடியோ 2023-ல் நடந்தது என்றும் சிறுவன் குடும்பத்தினர் மழுப்பி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















