மேலும் அறிய

கோவை கிணத்துக்கடவு அருகே நீட் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்த மாணவர் கீர்த்திவாசன் தற்கொலை

’’இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது முறையாக தேர்வெழுதி முடிவுகளுக்காக கீர்த்திவாசன் காத்திருந்தார்’’

கோவை அருகே நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மனமுடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. விவசாயியான இவருக்கு 20 வயதில் கீர்த்திவாசன் என்ற மகன் இருந்தார். கீர்த்திவாசன் கடந்த 2018 ஆம் ஆண்டில் பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றார். இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார். 2019 ஆம் ஆண்டில் முதல் முறையாக கீர்த்திவாசன் நீட் தேர்வு எழுதிய நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்தார். இதனை தொடர்ந்து ஒராண்டு மீண்டும் படித்து 2020ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதினார். இந்த தேர்விலும் அவர் மீண்டும் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்தார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த கீர்த்திவாசன், மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத படித்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் மூன்றாவது முறையாக அத்தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், அத்தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தார். இதனிடையே தொடர்ந்து 2 முறை நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கீர்த்திவாசன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். மூன்றாவது முறையும் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்திலும், இத்தேர்விலும் தோல்வி அடைந்தால் மீண்டும் தேர்வு எழுத முடியாது என்ற அச்சத்திலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த கீர்த்திவாசன் நேற்று மதியம் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்து தெரியவந்ததை அடுத்து கீர்த்திவாசனை அவரது குடும்பத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து கீர்த்திவாசன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் கீர்த்திவாசன் உயிரிழந்தார்.

இது குறித்து கீர்த்திவாசனின் தந்தை குப்புசாமி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கீர்த்திவாசனின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தொடர் தோல்வியால் மனமுடைந்து மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104


சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.