மேலும் அறிய

கோவையில் 25ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து நூலை வாங்கி கூலி அடிப்படையில் துணியாக நெசவு செய்து தருகின்றனர். இதற்காக 3 வருடங்களுக்கு ஒருமுறை ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்குவது வழக்கம். ஆனால் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக கூலி வழங்கவில்லை.  இதனையடுத்து கூலி உயர்வு வழங்க கோரி  பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தமிழக அமைச்சர்கள் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதமும் பல்லடம் மற்றும் இதர ரகங்களுக்கு 20 சதவீதமும்  கூலி உயர்வு வழங்குவது என ஒப்பந்தம் செய்யப்பட்டது.


கோவையில் 25ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

இதனையடுத்து இந்த கூலி உயர்வு டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கததால் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் விசைத்தறிக் கூடங்களை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 25 வது நாளை எட்டியுள்ளது. இதன் காரணமாக கோவை திருப்பூர் மாவட்டத்தில் இரண்டு லட்சம் விசைத்தறி கூடங்கள் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் இதனை நம்பி உள்ள ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். 


கோவையில் 25ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கும்  இடையே தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் கூலி உயர்வு வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், விசைத்தறி உரிமையாளர்கள் இன்று விசைத்தறி கூடங்களிலும், வீடுகளிலும்  கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் சோமனூர் பகுதி தலைவர் பழனிச்சாமி கூறுகையில், ”மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூலி உயர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இரண்டு மாதங்கள் ஆகியும் ஜவுளி உறுபத்தியாளர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்காததால் 25 நாட்களாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களிலும் விசைத்தறி தொழிலாளர்கள் வீடுகளிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.


கோவையில் 25ஆவது நாளாக தொடரும் விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

அடுத்த கட்டமாக நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 1.25 கோடி மீட்டர் துணி உற்பத்தியும், நாளொன்றுக்கு 60 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார். இதனிடையே விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கோவை தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விசைத்தறி உரிமையாளர்களுக்கு இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஊட்டிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! கோடை விடுமுறையில் பயணிக்க ரெடியா? டிக்கெட் முன்பதிவு விவரம் இதோ!
ஊட்டிக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு! கோடை விடுமுறையில் பயணிக்க ரெடியா? டிக்கெட் முன்பதிவு விவரம் இதோ!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலையில் அதிர்ச்சி – மலையேற்றத்தின் போது உயிரிழந்த பக்தர்
தென்கயிலாயம் வெள்ளியங்கிரி மலையில் அதிர்ச்சி – மலையேற்றத்தின் போது உயிரிழந்த பக்தர்
மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!
மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
MP-க்களான அன்புமணி, எல்.கே.சுதீஷ்; 6 பேர் போட்டியின்றி தேர்வு- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
’’எங்கும் கொலை, எப்போதும் கொலை; நீங்கள் ஆண்டதும், மக்கள் மாண்டதும் போதும்’’- திமுகவை வறுத்தெடுத்த ஈபிஎஸ்
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
2026 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- கூடுதல் நேரம் வழங்கி உத்தரவு!
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
மருதமலை கோவிலில் செல்போன் தடை… நாளை முதல் அமலுக்கு வரும் அதிரடி அறிவிப்பு
Galaxy S26 Ultra Huge Offer: ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
ரூ.20,000 ஆஃபர்.! 256GB விலைல 512GB கிடைக்குது.! சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ராவ அள்ளுங்க.!
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
Embed widget