மேலும் அறிய

மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!

மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற பெருமை பெற்றது கோவை மாவட்டம். சிறு, குறு நிறுவனங்களில் முதுகெலும்பாக கோவை உள்ளது. குறிப்பாக கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மருதமலை கோயில் உள்ளது. அங்கு நாளை முதல் அதிரடி மாற்றமாபக்தர்கள் செல்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேசவும், வீடியோ போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!

கோவை மருதமலை சுப்ரமணிய சுவாமி முருகன் கோயிலுக்கு கிட்டத்தட்ட அறுபடை வீடுகளுக்கு இணையான பக்தர்கள் செல்கின்றனர். இதனால் இதை முருகனின் 7வது படை வீடு என்றும் பக்தர்கள் அழைப்பார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகிறார்கள். தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை செல்கிறார்கள். வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் கோயில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே வார விடுமுறை நாட்களில் மலைப் பகுதிக்கு கார்களில் செல்ல தடை உள்ளது. தற்போது அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டம், மருதமலை கோயில் வரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் விடுக்கிறோம். மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 10.03.2026 தேதி (நாளை) முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசுவாமி சன்னதி, பாம்பாட்டி சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகள் மற்றும் திருக்கோயில் வளாகத்திற்குள், கைப்பேசி (செல்போன்) பேசவும். புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது. செல்போன் தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது கைப்பேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு உள்ளே வரவும்.


மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!

இந்த நடவடிக்கைக்கு அனைத்து பக்தர்களும் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்து, ஒத்துழைப்பு நல்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் மருதமலை செல்லும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த தடை விதிமுறை குறித்து பக்தர்கள் ஆத்திர அவசரத்திற்கு யாரையும் தகவல் தொடர்பு கொள்ள முடியாது" என கூறுகிறார்கள். ஆனால் மருதமலை கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதில் சிலர் போட்டோ எடுக்கிறோம் என்று பக்தர்களுக்கு இடையூறு செய்கிறார்கள்.  கோயிலின் மாண்பை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!
மருதமலை கோயிலில் அதிரடி மாற்றம்! செல்போன் பயன்பாட்டிற்கு தடை: பக்தர்கள் அதிர்ச்சி!
ட்ரோன் தாக்குதல் பயம்... 3 நாட்கள் துபாயில் சிக்கிய கோவை குடும்பங்கள்...
ட்ரோன் தாக்குதல் பயம்... 3 நாட்கள் துபாயில் சிக்கிய கோவை குடும்பங்கள்...
சாலை விபத்தில் மூளைச்சாவு... 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த வாலிபர்...
சாலை விபத்தில் மூளைச்சாவு... 3 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த வாலிபர்...
வழி தவறி வந்த புள்ளி மான்… நாய்கள் கடித்து கால் உடைப்பு...
வழி தவறி வந்த புள்ளி மான்… நாய்கள் கடித்து கால் உடைப்பு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
NEET UG 2026: இன்னும் 2 நாட்கள்தான்.. நீட் தேர்வு விண்ணப்பம் நீட்டிப்பு- ஆனா இனி கிடையாது!
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
ஜனநாயகன் மறுதணிக்கை மீண்டும் ஒத்திவைப்பு...சென்சார் போர்ட் சொன்ன காரணம்..சிரிப்பதா அழுவதா என்கிற குழப்பத்தில் விஜய் ரசிகர்கள்
Embed widget