மேலும் அறிய

”பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழா மேடையில் பரபரப்பு” ஆளுநரிடமே புகார் மனு கொடுத்த மாணவர்..!

முனைவர் பட்ட மாணவர்களிடம் பல்கலை. பேராசிரியர்களாக இருக்கும் சில வழிகாட்டிகள் (Guide), ஆயிரக்கணக்கில் பணம் கேட்கின்றனர், ஹோட்டலில் விருந்து வைக்க மாணவர்களை நிர்பந்திக்கின்றனர் - பிரகாஷ்

கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பட்டங்களை ஆளுநர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தபோதே, பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர், ஆளுநரிடம் நேரடியாக மேடையில் வைத்தே பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முனைவர் பட்டம் பெற லஞ்சம் – மாணவரின் பரபரப்பு புகார்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழா அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவியோடு தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஏராளமான மாணவர்களுக்கு வரிசைப்படி ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு மாணவர், ஒரு கடிதத்தை பிரித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுக்க முயன்றார்.

அருகே இருந்த நிர்வாகி அந்த மாணவரை தடுக்க முயன்றும், அந்த மாணவர் அவரை தாண்டி வந்து ஆளுநரை நேருக்கு நேர் சந்தித்து அந்த புகார் மனுவை ஆர்.என்.ரவியிடமே கொடுத்துவிட்டு, சில விஷயங்களையும் ஆளுநரிடம் சொல்லிவிட்டு தன்னுடைய பட்டத்தை பெற்றுக்கொண்டு சென்றார். அந்த கடிதத்தை ஆளுநர் தன்னுடைய செயலாளரிடம் கொடுத்து அதனை என்னவென்று பார்க்கும்படி உத்தரவிட்டுள்ளது பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் அந்த மாணவர், அவர் கொடுத்த புகாரில் என்ன இருந்தது ?

ஆளுநர் ஆர்.என்.ரவியிடமே அத்தனை பேர் மத்தியில் தைரியமாக புகார் கடிதம் அளித்த அந்த மாணவர் பெயர் பிரகாஷ், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற வந்தபோதுதான் அந்த கடித்தை ஆளுநரிடம் அவர் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் முனைவர் பட்டம் பெற படிக்கும் மாணவர்களிடம் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருக்கும் சில வழிகாட்டிகள் (Guide), பல ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாகவும், ஹோட்டலில் விருந்து வைக்க மாணவர்களை நிர்பந்தம் செய்வதோடு, தங்களது தனிப்பட்ட வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்துவதாக மாணவர் பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் விடுதிகளில் வசதியில்லை

அதோடு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் முறையாக இயங்குவதில்லை என்றும் வசதிகள் ஏதும் செய்துக்கொடுக்கப்படாமல் ஆதிதிராவிட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் ஆளுநரிடம் பிரகாஷ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி கடிதம் வழங்கியிருக்கிறார்.

மேலும் விளையாட்டு விழா என்று பெயருக்கு ஏதேனும் ஒரு விழாவை சொல்லி பல ஆயிர கணக்கில் மாணவர்களிடம் பணம் வசூல் வேட்டையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் ஈடுபடுவதாகவும் அவர் அளித்துள்ள புகாரால் பல்கலைக்கழக பேராசியர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் சர்ச்சை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Embed widget