மேலும் அறிய

எருமை மோதிய விபத்தில் தடம் புரண்ட மலை ரயில் - உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் எருமை மோதி விபத்துக்குள்ளானதில் நீலகிரி மலை ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளையும் கவர்ந்துள்ள இந்த ரயிலில் பயணிக்க, சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி மலை ரயில் 220 சுற்றுலா பயணிகள் உடன் புறப்பட்டு சென்றது. அந்த ரயில் உதகை ரயில் நிலையத்திற்கு முன்பாக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பெர்ன்ஹில் பகுதியில் மழைறையில் வந்து கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக தண்டவாளத்தின் குறுக்கே தோடர் பழங்குடியின மக்களின் வளர்ப்பு எருமை வந்தது. இதனைப் பார்த்த மலை ரயில் இன்ஜின் ஓட்டுநர் பிரேக் அழுத்தியதில் மலை ரயில் பெட்டி சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியது. மேலும் ரயில் வளர்ப்பு எருமை மீது ரயில் மோதி விபத்துள்ளானது. ரயிலின் மீது மோதிய வளர்ப்பு எருமை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த விபத்தில் ரயிலின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் மலை ரயிலில் பயணம் செய்த 220 பயணிகளும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல் துறையினர் 220 பணிகளையும் பத்திரமாக மீட்டு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரயில் பெட்டி தடம் புரண்ட இடத்தில் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து காரணமாக உதகை - குன்னூர் இடையேயான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளில் ரயில்வே துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உதகையில் மலை ரயில் தடம் புரண்டது உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எருமை மோதிய விபத்தில் தடம் புரண்ட  மலை ரயில் - உதகையில் பரபரப்பு

சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரிக்கு மலை இரயில் பயணம் செய்வது என்பது, ஒரு உன்னத பயண அனுபவமாக இருந்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகை வரை நீலகிரி மலை இரயில் இயக்கப்படுகிறது. இந்த நீலகிரி மலை இரயில் தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயிலாக அமைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி மூலமும், குன்னூர் முதல் உதகை வரை டீசலிலும் ரயில் இயக்கப்படுகிறது. இந்த மலை ரயில் உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுந்து வருகிறது. 108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயிலில் இருந்து, மலைகள், அடர்ந்த காடுகள், ஆங்காங்கே நீர் வீழ்ச்சிள் இயற்கையின் ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகளை காண முடியும். இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget