மேலும் அறிய

நீட் தேர்வில் வெற்றி பெற்று மலசர் பழங்குடியின மாணவி சங்கவி அசத்தல்..!

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் ப்ளஸ் 2 முடித்த முதல் மாணவி சங்கவி தான். உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் கவனம் பெற்றார்.

மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள். பாதியில் நிற்கும் பசுமை வீடுகள். மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை. படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள நஞ்சப்பணூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை. இந்த பழங்குடியினர் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலசர் பழங்குடியினருக்கு, சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சங்கவி மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்வில் கிராமத்தில் முதல் தலைமுறை மாணவியாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவி சங்கவி தான். உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தார். சிறு வயது முதல் மருத்துவராக வேண்டுமென்ற இலட்சியத்தோடு படித்த சங்கவிக்கு, சாதி சான்றிதழ் தடையாக இருந்தது. இதனால் தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், சில மாதங்களில் படிப்பை பாதியில் கைவிட்டார். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் அரசின் பார்வை இந்த மாணவி மீது பட்டது. மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி அந்த கிராமத்திற்கு மின்சாரமும், தார் சாலைகளும் கிடைத்தன. அதேசமயம் இன்னும் பல குடிசை வீடுகளே உள்ள நிலையில், முறையான வசதிகள் கிராமத்திற்கு கிடைக்கமால் இருக்கின்றன.


நீட் தேர்வில் வெற்றி பெற்று மலசர் பழங்குடியின மாணவி சங்கவி அசத்தல்..!

ஏற்கனவே எழுதிய நீட் தேர்வில் சங்கவி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக அத்தேர்வு எழுத தயாராகி வந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் மாணவி சங்கவிக்கு உதவிக்கரங்களை நீட்டினர். விடா முயற்சியுடன் படித்து நீட் தேர்வில் மாணவி சங்கவி தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மலசர் பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதல் மருத்துவராக மாணவி சங்கவி படிக்கவுள்ளார். இது அக்கிராம மாணவர்களிடையே படிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

இது குறித்து மாணவி சங்கவி கூறுகையில், ”12ம் வகுப்பு முடிச்ச பிறகு பெரிய பயம் இருந்தது . மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை. 2018ம் ஆண்டு தேர்வு எழுதிய போது, 6 மார்க்கில் தவறவிட்டேன். தொடர்ந்து 2 வது முறையாக தேர்வு எழுதுவதற்கு கடினமாக படிக்க முயற்சி செய்தேன். எங்களது ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை. அப்பா இறந்து ஒராண்டு ஆகிவிட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகள் தொடர முடியவில்லை, சிலபஸ் மாறிந்திருந்தது. அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். அவரை கூட இருந்து பார்க்க வேண்டிய நிலையில் படித்தேன். கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்கு படித்தேன்.  120 கட் ஆப் இருக்கும் நிலையில் 202 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். கஷ்டப்படும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்பதற்காக டாக்டர் கனவு வந்தது. தேர்வில் வெற்றி பெற்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னை பார்த்து இன்னும் பலர் இந்த கிராமத்தில் இருந்து படிப்பார்கள்.” என அவர் தெரிவித்தார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
பங்குனி உத்திரம் ஸ்டார்ட்!! பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்றம்...
பங்குனி உத்திரம் ஸ்டார்ட்!! பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்றம்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
குடியிருப்பில் போலீஸ் ரெய்டு... கோவையில் கஞ்சா செடி பறிமுதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
KP Sharma Oli: அதாம்லே வர்கீசு.. நேபாளம் முன்னாள் பிரதமர் கைது.. பதவியேற்ற மறுநாளே பாலேந்திர ஷா சம்பவம்!
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
IPL 2026 RCB vs SRH: இன்று முதல் ஐபிஎல் திருவிழா.. பெங்களூரு - ஹைதராபாத் மோதல்.. யார் கெத்து?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
Jothimani MP: தொண்டர்கள் உழைப்பை தின்னும் சிலர்.. பரபரப்பு ட்வீட்.. யாரை சொல்கிறார் ஜோதிமணி?
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
TVK Vijay: விஜயை தடுக்க குழி தோண்டப்பட்டதா? உண்மை இதுதான்.. சென்னை மாநகராட்சி விளக்கம்!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
R Parthiban: எனக்கு சாதியே வேண்டாம் சாமி.. பார்த்திபன் திடீர் முடிவு - நெட்டிசன்களுக்கு கிடைத்த வெற்றி!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
இரவு முழுவதும் இரு மகள்களை தலைகீழாக தொங்க விட்ட தந்தை.. ஒருவர் உயிரிழப்பு!
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
Embed widget