மேலும் அறிய

நீட் தேர்வில் வெற்றி பெற்று மலசர் பழங்குடியின மாணவி சங்கவி அசத்தல்..!

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் ப்ளஸ் 2 முடித்த முதல் மாணவி சங்கவி தான். உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் கவனம் பெற்றார்.

மழையில் ஒழுகும் ஓலைக் குடிசைகள். பாதியில் நிற்கும் பசுமை வீடுகள். மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்மை. படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள். இது ஏதோ அடர் வனத்திற்குள்ளோ, மலைகளில் வாழும் பழங்குடிகளின் நிலையில்லை. கோவை மாவட்டம் திருமலையம்பாளையம் பேரூராட்சியில் உள்ள நஞ்சப்பணூர் பகுதியில் சமவெளிப் பகுதியில் வாழும் மலசர் பழங்குடி நிலை. இந்த பழங்குடியினர் கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் மலசர் பழங்குடியினருக்கு, சுற்றுவட்டார விவசாய தோட்டங்களில் உள்ள கூலி வேலை வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சங்கவி மருத்துவராக வேண்டும் லட்சியத்தில் நீட் தேர்வில் கிராமத்தில் முதல் தலைமுறை மாணவியாக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளார்.

அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் 12 வகுப்பு முடித்த முதல் மாணவி சங்கவி தான். உயர் படிப்பிற்கு சாதி சான்றிதழ் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வந்தார். சிறு வயது முதல் மருத்துவராக வேண்டுமென்ற இலட்சியத்தோடு படித்த சங்கவிக்கு, சாதி சான்றிதழ் தடையாக இருந்தது. இதனால் தனியார் கல்லூரியில் சேர்ந்த அவர், சில மாதங்களில் படிப்பை பாதியில் கைவிட்டார். இது குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளால் அரசின் பார்வை இந்த மாணவி மீது பட்டது. மாணவி சங்கவிக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி அந்த கிராமத்திற்கு மின்சாரமும், தார் சாலைகளும் கிடைத்தன. அதேசமயம் இன்னும் பல குடிசை வீடுகளே உள்ள நிலையில், முறையான வசதிகள் கிராமத்திற்கு கிடைக்கமால் இருக்கின்றன.


நீட் தேர்வில் வெற்றி பெற்று மலசர் பழங்குடியின மாணவி சங்கவி அசத்தல்..!

ஏற்கனவே எழுதிய நீட் தேர்வில் சங்கவி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக அத்தேர்வு எழுத தயாராகி வந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் மாணவி சங்கவிக்கு உதவிக்கரங்களை நீட்டினர். விடா முயற்சியுடன் படித்து நீட் தேர்வில் மாணவி சங்கவி தேர்ச்சி அடைந்துள்ளார். இதனால் மலசர் பழங்குடி சமுதாயத்தில் இருந்து முதல் மருத்துவராக மாணவி சங்கவி படிக்கவுள்ளார். இது அக்கிராம மாணவர்களிடையே படிக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.

இது குறித்து மாணவி சங்கவி கூறுகையில், ”12ம் வகுப்பு முடிச்ச பிறகு பெரிய பயம் இருந்தது . மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை. 2018ம் ஆண்டு தேர்வு எழுதிய போது, 6 மார்க்கில் தவறவிட்டேன். தொடர்ந்து 2 வது முறையாக தேர்வு எழுதுவதற்கு கடினமாக படிக்க முயற்சி செய்தேன். எங்களது ஊரில் அடிப்படை வசதிகள் இல்லை. அப்பா இறந்து ஒராண்டு ஆகிவிட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை, ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தினால் ஆன்லைன் வகுப்புகள் தொடர முடியவில்லை, சிலபஸ் மாறிந்திருந்தது. அம்மாவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல். அவரை கூட இருந்து பார்க்க வேண்டிய நிலையில் படித்தேன். கையில் இருக்கும் புத்தகங்களை வைத்து நீட் தேர்விற்கு படித்தேன்.  120 கட் ஆப் இருக்கும் நிலையில் 202 மார்க் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளேன். கஷ்டப்படும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டுமென்பதற்காக டாக்டர் கனவு வந்தது. தேர்வில் வெற்றி பெற்றது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னை பார்த்து இன்னும் பலர் இந்த கிராமத்தில் இருந்து படிப்பார்கள்.” என அவர் தெரிவித்தார்.

 

தலைப்பு செய்திகள்

ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
coimbatore power cut: கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (28-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Covai Madurai Metro: கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
கோவை, மதுரை மெட்ரோ திட்டம்..! மீண்டும் நிராகரித்த மத்திய அரசு - தமிழ்நாடு அரசுக்கு அட்வைஸ்
Coimbatore power cut: கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் (ஜூலை 27) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
Dhanush: தனுஷ் அரசியலுக்கு வந்தால் திமுக, அதிமுக காலி.. விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கணிப்பு!
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
Rasi Palan Today (29-07-2026): ஆடி மாத பௌர்ணமி.. இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
Embed widget