மேலும் அறிய

நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

இந்த யானை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயரான ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால் பகுதியை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காயம்பட்ட காட்டு யானையை பிடித்த வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சில்வர் கிளவுட், கோக்கால் உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உலவி வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயரான ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால் பகுதியை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மற்ற காட்டு யானைகளோடு ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவ்வப்போது பழங்களில் மாத்திரைகளை வைத்து யானைக்கு தொடர்ந்து உணவாக கொடுத்து வந்தனர்.

யானை நடமாடும் பகுதிகளில் மாத்திரை வைத்த உணவை வைத்துச்செல்வதும், அதனை யானை உட்கொள்வதும் வழக்கமாக இருந்தது. இருப்பினும் யானையின் காயம் குணமடையவில்லை. காயம் மேலும் மோசமானது. யானையின் பின் பகுதி முழுக்க புரையோடி புழு வைத்து, உடல் மெலிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது. இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டுமென உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர்.  


நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் ‘கரோல்’ எனப்படும் மரக்கூண்டை தயார் செய்தனர். இந்நிலையில் இன்று காலை புத்தூர் வயல் பகுதியில் அந்த யானை தென்பட்டது.  இதையடுத்து யானையை கண்காணித்த வனத்துறையினர் ஈப்பங்காடு பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் யானை இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் குழுவோடு யானையை சுற்றி வளைத்தனர்.

மயக்க ஊசி செலுத்தாமலேயே பிடிக்க முடிவு செய்யப்பட்டது. சுருக்கிட்ட கயிற்றைப் போட்டி அதற்குள் யானையை வரவழைத்து, கால்களை பிணைத்தனர். தொடர்ந்து யானையை பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலில் வீக்கம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

இந்த நடவடிக்கை காலதாமதமான நடவடிக்கை எனவும், ஆரம்ப நிலையிலையே யானையை பிடித்து சிகிச்சை அளித்து இருக்க வேண்டும் எனவும், எப்படி இருப்பினும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
EPS meets Governor: அண்ணாமலையை அடுத்து ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்; என்ன காரணம்?
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
Breaking News LIVE: இயல்பை விட 122% கூடுதலாக பெய்துள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Vijay Sethupathi: யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
யோசிக்காமல் விஜய் சேதுபதி செய்த சம்பவம்.. நெகிழ்ந்து போன நடிகர் சிங்கம் புலி!
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
Emergency Declared Day: எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
எமர்ஜென்சி அமலுக்கு வந்த நாள் - இந்திரா காந்தியின் முடிவுக்கான காரணங்கள் தெரியுமா?
Embed widget