மேலும் அறிய

நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

இந்த யானை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயரான ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால் பகுதியை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் காயம்பட்ட காட்டு யானையை பிடித்த வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சில்வர் கிளவுட், கோக்கால் உள்ளிட்ட  சுற்றுவட்டாரப் பகுதிகளில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உலவி வந்தது. இந்த யானை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் பெயரான ‘சில்வர் மான்ஸ்ட்ரா’ என்ற பெயரில் உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது. இந்த யானைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வால் பகுதியை ஒட்டிய தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனைக் கவனித்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து வனத்துறையினர் யானையை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். மற்ற காட்டு யானைகளோடு ஏற்பட்ட மோதலில் காயம் ஏற்பட்டு இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து அவ்வப்போது பழங்களில் மாத்திரைகளை வைத்து யானைக்கு தொடர்ந்து உணவாக கொடுத்து வந்தனர்.

யானை நடமாடும் பகுதிகளில் மாத்திரை வைத்த உணவை வைத்துச்செல்வதும், அதனை யானை உட்கொள்வதும் வழக்கமாக இருந்தது. இருப்பினும் யானையின் காயம் குணமடையவில்லை. காயம் மேலும் மோசமானது. யானையின் பின் பகுதி முழுக்க புரையோடி புழு வைத்து, உடல் மெலிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவதிப்பட்டு வந்தது. இந்த யானைக்கு உடனடியாக சிகிச்சை அளித்து காப்பாற்ற வேண்டுமென உள்ளூர் மக்கள் வலியுறுத்தினர்.  


நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த 3 நாட்களாக யானையை பிடிக்க வனத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். மேலும் யானைக்கு சிகிச்சை அளிக்க முதுமலையில் உள்ள அபயரண்யம் பகுதியில் ‘கரோல்’ எனப்படும் மரக்கூண்டை தயார் செய்தனர். இந்நிலையில் இன்று காலை புத்தூர் வயல் பகுதியில் அந்த யானை தென்பட்டது.  இதையடுத்து யானையை கண்காணித்த வனத்துறையினர் ஈப்பங்காடு பகுதியில் உள்ள ஒரு காபி தோட்டத்தில் யானை இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து விஜய், சுமங்களா ஆகிய இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் கால்நடை மருத்துவர்கள் குழுவோடு யானையை சுற்றி வளைத்தனர்.

மயக்க ஊசி செலுத்தாமலேயே பிடிக்க முடிவு செய்யப்பட்டது. சுருக்கிட்ட கயிற்றைப் போட்டி அதற்குள் யானையை வரவழைத்து, கால்களை பிணைத்தனர். தொடர்ந்து யானையை பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலில் வீக்கம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சையளிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


நீலகிரி : காயம்பட்ட காட்டு யானை : மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்டது எப்படி?

இந்த நடவடிக்கை காலதாமதமான நடவடிக்கை எனவும், ஆரம்ப நிலையிலையே யானையை பிடித்து சிகிச்சை அளித்து இருக்க வேண்டும் எனவும், எப்படி இருப்பினும் யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget