மேலும் அறிய

“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்காக இன்று ஆஜரானார். இதற்கு முன்னதாக தனபால் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “சிபிசிஐடி அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் அனுப்பினார்கள். அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன். கோடநாடு வழக்கு தொடர்பாக சுதாகர் தலைமையில் ஏற்கனவே விசாரணை நடந்தது. தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன்.

எனது தம்பி ஏற்கனவே என்னிடம் எல்லாம் சொல்லியுள்ளார். கோடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது?, என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார். அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன். கோடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள். இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். மாற்றுக்கட்சியினர் இல்லை. ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர்.

கோடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியபடி பணம் தரவில்லை. எனது தம்பியை தாக்கியுள்ளனர்‌ எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்த்து தாக்கியுள்ளார். 2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து எனது தம்பி துப்பினார். பின்னர் மீண்டும் அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்து, அயோத்தி பட்டிணம் என்ற இடத்தில் உள்ள தென்னத்தோப்பில் மது அருந்தி உள்ளனர். அதிமுக முக்கிய நபர்கள் அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசி சென்றுள்ளனர்.


“கோடநாடு வழக்கில் இபிஎஸ்தான் முக்கிய குற்றவாளி” - சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரான கனகராஜின் சகோதரர்

இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன். இதற்கு நியாயம் கிடைக்கவில்லை. சிபிசிஐடி மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை நான் திறந்து பார்க்கவில்லை. 5 பேக்குகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷிடமும், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைத்துள்ளார். இன்று மாலை விசாரணைக்கு பின்னர் என்ன நடந்தது என விளக்கமாக கூறுகிறேன். எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள்.

எனக்கு மனநிலை பாதிப்பு இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இளங்கோவன், சவுக்கு சங்கர் போன்றோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என சான்றிதழ் அளித்திருக்க வேண்டும். என் மீது பொய்யான குற்றச்சாட்டை சொல்கின்றனர். ஏற்கனவே சம்பவம் நடந்த போது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சேலத்தில் சுதாகர் தலைமையில் விசாரணை நடந்தது. ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னை கடுமையான முறையில் தாக்கினர்.  அப்போது ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை.என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை. ஜஜி சுதாகரை விசாரிக்க வேண்டும். சேலம் எஸ்பி, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்பிசிஐடி முத்துமாணிக்கம் ஆகியோரை விசாரித்தால் எல்லாம் வெளியே வரும்.

2017 க்கு பிறகு கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் விசாரணை அதிகாரிகளின் சொத்து மதிப்பு உயர்வு குறித்து இலஞ்ச ஒழிப்பு துறை கவனிக்க வேண்டும். இவ்வழக்கில் தடயங்கள் அழித்ததாக ஐஜி சுதாகர் என் மீது வழக்கு பதிவு செய்தார். நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை. எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சோதனை செய்த போது போனை வாங்கி கொண்டனர். ஐஜி சுதாகரின் பலவீனத்தை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சேர்த்து என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர். சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன். விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார். தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள். உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார். என்னை வெட்டி கூறு போட்டாலும் உண்மையை சொல்வேன். எதற்கும் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
“திமுக மீது குற்றச்சாட்டு, அதிமுக வெற்றி நம்பிக்கை – கோவையில் எஸ்.பி. வேலுமணி பேச்சு”
கேரள தேர்தல் களம்: மோடி வருகையால் பரபரப்பு! நாளை பிரச்சாரத்தில் பிரதமர், பாஜகவினர் உற்சாகம்!
கேரள தேர்தல் களம்: மோடி வருகையால் பரபரப்பு! நாளை பிரச்சாரத்தில் பிரதமர், பாஜகவினர் உற்சாகம்!
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சியில் தங்கத்திற்காக 75 வயது மூதாட்டி கொலை! அதிர்ச்சி திருப்பம்: சரோஜா சிக்கியது எப்படி?
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
பொள்ளாச்சி அருகே பரபரப்பு: 8 பவுன் நகைக்காக தோழியையே கொன்ற 75 வயது மூதாட்டி கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
DMK Candidate List: மு.க.ஸ்டாலின் முதல் உதயநிதி வரை! திமுக-வின் 164 வேட்பாளர்கள் யார்? யார்? என்னென்ன தொகுதி?
Embed widget