மேலும் அறிய

பொள்ளாச்சி பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று; பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவையில் கூடுதலாக கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் கடந்த ஒரு மாத காலமாக தினசரி கொரோனா பாதிப்புகள் ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை சார்பில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், புரவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கும், பனிக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளி மாணவர் ஒருவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் நேற்று முன் தினம் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 9 ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 3 மாணவர்களுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பள்ளியை 3 நாட்களுக்கு மூட சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாட்களில் 7 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பது பெற்றோர் மற்றும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு” – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்...
“உதயநிதிக்கு நல்ல புத்தி கொடு” – தோப்புக்கரணம் போட்டு இந்து மக்கள் கட்சி போராட்டம்...
அதிமுக பலவீனமா.? - எடப்பாடியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன்...
அதிமுக பலவீனமா.? - எடப்பாடியை நேரடியாக விமர்சித்த செங்கோட்டையன்...
யோகாவில் மிரட்டிய சிறுவர்–சிறுமிகள்!! கோவையில் நடந்த உலக சாதனை முயற்சி...
யோகாவில் மிரட்டிய சிறுவர்–சிறுமிகள்!! கோவையில் நடந்த உலக சாதனை முயற்சி...
டாஸ்மாக் முன் ரகளை... போதை உச்சத்தில் கோவையில் மணல் தாக்குதல்...
டாஸ்மாக் முன் ரகளை... போதை உச்சத்தில் கோவையில் மணல் தாக்குதல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்
4 Year Old boy Rescued |30 அடி போர்வெல் குழி!9 மணி நேர போராட்டம்..உயிருடன் சிறுவன் மீட்பு
பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK - Congress Alliance : ‘கேரளா பயணத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்’ காங்கிரஸ் கட்சியுடன் மனக்கசப்பு..?
‘கேரளா பயணத்தை ரத்து செய்த முதல்வர் விஜய்’ காங்கிரஸ் கட்சியுடன் மனக்கசப்பு..?
Thiruma: திருமாவை விளாசும் திமுகவினர்..! TVKவின் அமைச்சர் பதவிக்காக இஷ்டத்துக்கு அடித்துவிடுவதாக அட்டாக்
திருமாவை விளாசும் திமுகவினர்..! TVKவின் அமைச்சர் பதவிக்காக இஷ்டத்துக்கு அடித்துவிடுவதாக அட்டாக்
Semmalai Admk : அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.! இது தான் காரணம்- செம்மலை பரபரப்பு அறிக்கை
அதிமுகவில் இருந்து விலகுகிறேன்.! இது தான் காரணம்- செம்மலை பரபரப்பு அறிக்கை
Crude Oil Price Hike: பெட்ரோல் டீசல் விலை உயர்வு கன்ஃபார்ம் தான்.!? உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை; இப்போ எவ்வளவு.?
பெட்ரோல் டீசல் விலை உயர்வு கன்ஃபார்ம் தான்.!? உச்சத்தை தொட்ட கச்சா எண்ணெய் விலை; இப்போ எவ்வளவு.?
Petrol-Diesel Price: மீண்டும் உயரப் போகும் பெட்ரோல் டீசல் விலை.? Cut ஆன ரஷ்யா எண்ணெய்; வெளியான ஷாக் நியூஸ்.!
மீண்டும் உயரப் போகும் பெட்ரோல் டீசல் விலை.? Cut ஆன ரஷ்யா எண்ணெய்; வெளியான ஷாக் நியூஸ்.!
Thiruma: ”TVK-க்கு லெட்டர் கொடுத்தாலும், விஷயத்தை வெளியே சொல்லாதிங்க, CM போஸ்ட் ரெடி” - நோ சொன்ன திருமா
”TVK-க்கு லெட்டர் கொடுத்தாலும், விஷயத்தை வெளியே சொல்லாதிங்க, CM போஸ்ட் ரெடி” - நோ சொன்ன திருமா
MK Stalin DMK : இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்திருக்கு தவெக.! உஷாரா இருங்க ஸ்டாலின் அலர்ட்
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்திருக்கு தவெக.! உஷாரா இருங்க ஸ்டாலின் அலர்ட்
Thiruma: ”பொய் எல்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா
”பொய் எல்லாம் இல்லை, விஜயை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி பேசுனாங்க” உண்மையை போட்டுடைத்த திருமா
Embed widget