மேலும் அறிய

கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான கார் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஓட்டுநருக்கு அடி உதை

உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய திமுக கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேர ஆனந்த் என்பவரை அடித்து உதைத்தனர்.

கோவை சிவானந்தா காலனி அருகேயுள்ள கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். 66 வயதான இவர், மாற்றுத்திறனாளி. நான்கு சக்கர தள்ளுவண்டியில் சென்றபடி, சிறுசிறு கூலி வேலைகளை செய்து வந்தார். இன்று 11 மணியளவில் அப்பகுதியில் உள்ள இரயில்வே பாலத்தின் கீழ் தனது வண்டியில் வந்து கொண்டிருந்தார். அப்போது நடராஜன் வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு திரண்ட அவரது உறவினர்கள், விபத்தை ஏற்படுத்திய திமுக கொடி கட்டியபடி வந்த பார்ட்சூனர் காரில் இருந்த ஓட்டுனர் குபேர ஆனந்த் என்பவரை அடித்து உதைத்தனர். 


கோவையில் திமுக பிரமுகருக்கு சொந்தமான கார் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு - ஓட்டுநருக்கு அடி உதை

பின்னர் ஓட்டுனர் குபேர ஆனந்தை அவர்கள் காவல் துறையினருடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த கார் ஆர்.எஸ்.புரம் பகுதி திமுகவை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி என்பவருக்கு சொந்தமானது என்பதும், சர்வீஸ் விடுவதற்காக ஓட்டுனர் காரை எடுத்து சென்ற போது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இதனிடையே இது குறித்த தகவலறிந்து அங்கு வந்த கோவை வடக்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுனன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உள்ளாட்சி தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுக பிரமுகரின் கார் விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள ஹோலி டிரினிட்டி கதீட்ரல் என்ற தேவலாயம் மீது கடந்த ஜனவரி 23 ஆம் தேதியன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் தேவலாயத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த செபஸ்தியார் சிலையை கட்டையால் சேதப்படுத்தினர். இதையடுத்து பாஸ்டின் ஜோசப் என்ற உதவி மத போதகர், ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  

இதன் அடிப்படையில் காவல் துறையினர் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவன் மற்றும் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மதன் குமார், தீபக், மருதாசல மூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிலையை உடைத்தது தெரியவந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதன் குமார், தீபக், மருதாசல மூர்த்தி ஆகியோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள 3 பேரிடமும் கோவை மாநகர காவல் துறையினர் வழங்கினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
New Year 2026 Wishes: புத்தாண்டை Blast ஆக்க.. நண்பர்கள், உறவுகளுக்கு அனுப்ப 10 பளிச் வாழ்த்துகள் இதோ!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
SSTA: உடனடி முடிவு? பணி நிரந்தரம், பழைய ஓய்வூதியம்; ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அரசு!
DMK alliance: வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
வைகோ, திருமாவை நேரடியாக எச்சரித்த காங்.எம்பி- திமுக கூட்டணியில் திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
January: ஆருத்ரா தரிசனம் முதல் பொங்கல் பண்டிகை வரை.. ஜனவரியில் விசேஷ நாட்கள் இதுதான்!
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
New Year Resolution: புத்தாண்டு வாழ்த்துகள் மட்டும் போதுமா..! இந்த உறுதிமொழிகளை கூட ஷேர் செய்யலாம்
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
Best Car 2025: SUV-க்களை பின்னுக்குதள்ளி, விற்பனையில் அசத்திய செடான் - 41 வருடங்களில் ஒரே மாடல் தானாம்..
MK STALIN DMK: திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
திராவிடப் பொங்கல்.! திமுகவினருக்கு பறந்த மு.க. ஸ்டாலினின் முக்கிய உத்தரவு
Embed widget