மேலும் அறிய

ஆட்டோக்களில் புத்தகங்களை வாசித்துக்கொண்டே பயணிக்கலாம் ; கோவை போலீஸின் அசத்தல் முயற்சி

ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், குற்றங்களை குறைக்கும் வகையிலும் "லைப்ரரி ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் ஆட்டோ நூலகம் துவக்கப்பட்டுள்ளது.

கோவையில் முதல்முறையாக ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையிலும், குற்றங்களை குறைக்கும் வகையிலும் "லைப்ரரி ஆன் வீல்ஸ்" என்ற பெயரில் ஆட்டோ நூலகத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் தாக்கத்தால் நாளுக்கு நாள் புத்தக வாசிப்பு திறன் என்பது குறைந்து வருகிறது. அந்த வகையில் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்காகவும், காவலர்களின் மன இறுக்கத்தை போக்கும் வகையிலும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் காவல் நிலையங்களில் நூலகங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு  தொடங்கி வைத்தார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று தனியார் அறக்கட்டளை மூலம் ஆட்டோ நூலகம் மற்றும் பொதுமக்கள்  புத்தகம் அன்பளிப்பாக வழங்க பெட்டி ஆகியவற்றை துவக்கி வைத்தார். துடியலூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சையது என்பவரது ஆட்டோவில், பயணிகளுக்கு பயன்படும் வகையில் தன்னம்பிக்கை சார்ந்த புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள், சானிடைசர் மற்றும் சாக்கெட்லெட் பெட்டியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை துவக்கி வைத்து பின்பு காவல் ஆணையர் பாலகிருஷ்ணனன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவை மாநகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடி வருகின்றன. ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், பயணிகள் பயணத்தின் போது நேரத்தை  பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும் மினி நூலகம் அமைக்கப்படுகிறது. மாநகரில் உள்ள எல்லா ஆட்டோக்களிலும் மினி நூலகம் செயல்படுத்தப்படும். சையத் என்பவரின் ஆட்டோவில் கலாம் பவுண்டேசன் சார்பில் மினி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பயணம் இனிதாகவும், சுகமாகவும் இருக்கும் வகையில் மினி நூலகம் உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 


ஆட்டோக்களில் புத்தகங்களை வாசித்துக்கொண்டே பயணிக்கலாம் ; கோவை போலீஸின் அசத்தல் முயற்சி

புத்தகங்கள் மனிதர்களிடம் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பங்களிப்பு அளிக்கின்றன. நூலகங்களில் நூல்கள் உள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் வீடுகளில் புத்தகம் வைத்துள்ளனர். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்க வேண்டும் என்பதற்கான தெருக்களில் வீதிதோறும் நூலகங்கள் மற்றும் ஆட்டோக்களில் மினி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்கள் படிப்பதன் மூலம் அறிவை வளர்க்க முடியும். புத்தகங்கள் அறிவை கூர்மை செய்யும் ஆயுதம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், மக்கள் அமைதியாக வாழ்க்கை வாழவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாசிப்பு குற்றங்களை குறைக்க உதவும். ஆட்டோக்களில் தன்னம்பிக்கை மற்றும் பெண்கள் தொடர்பான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது.

வீதிதோறும் நூலகங்களில் குழந்தைகள் கற்பனைத்திறனை வளர்க்கும் வகையில் கதை புத்தகங்கள் வைத்துக் கொண்டுள்ளோம். இதனால் குழந்தைகள் பயனடைவார்கள். மாலை நேரங்களில் தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிடுவதையும், மொபைல் போன் பயன்பாட்டை குறைக்கவும் புத்தகங்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். கால்டாக்ஸிகளில் இது போல நூலகம் தொடங்க முயற்சி செய்யப்படும். மாதம் தோறும் இந்த புத்தகங்கள் மாற்றப்படும். இந்த முன்னெடுப்பு குற்றங்களை குறைக்கவும் உதவும்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget