ஒரே தள்ளலில் சாய்ந்த மரம்... மேட்டுப்பாளையத்தை பதறவைத்த ‘பாகுபலி’ யானையின் ஆக்ரோஷம்...
மேட்டுப்பாளையம் அருகே ஆக்ரோஷமான ‘பாகுபலி’ யானை மரத்தை வேரோடு தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது; வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பகுதியில் சுற்றித்திரியும் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானை திடீரென ஆக்ரோஷமாக மாறி மரத்தை வேரோடு தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறை மற்றும் நெல்லிமலை வனப்பகுதிகளில் ‘பாகுபலி’ என்ற பெயரில் அழைக்கப்படும் ஆண் காட்டு யானை அடிக்கடி சுற்றித்திரிந்து வருகிறது. வழக்கமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓடந்துறை வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குச் செல்லும் இந்த யானை, மேட்டுப்பாளையம் – உதகை சாலையை அமைதியாகக் கடந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், நேற்று இரவு ஓடந்துறை – உதகை சாலையில் உள்ள ஒரு ஹார்டுவேர் கடை அருகே வந்த பாகுபலி யானை திடீரென ஆக்ரோஷமாக நடந்துகொண்டது. சாலையோரத்தில் இருந்த பெரிய மரத்தை வேரோடு தள்ளியதுடன், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. யானையின் நடவடிக்கையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் யானையை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, பாகுபலி யானை உதகை சாலையைக் கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
பொதுவாக அமைதியாகக் காணப்படும் பாகுபலி யானை திடீரென ஆக்ரோஷமாக மாறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Before You Go
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















