மேலும் அறிய

கொரோனாவை வென்ற 95 வயது முதியவர் - கைதட்டி வழி அனுப்பிய மருத்துவர்கள்

கொரோனா தொற்றில் இருந்து 95 வயது முதியவர் மீண்டு இருப்பது, அத்தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கோவையில் 95 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பூரண குணமடைந்து, அத்தொற்றில் இருந்து மீள முடியும் என பலருக்கும் நம்பிக்கையூட்டியுள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை பரவல் நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்புகள், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது அலையின் வீரியம் காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கொரோனா தொற்று பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியாமல் இளம் வயதினரும் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கோவையை சேர்ந்த 95 வயது முதியவர் ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு பூரண குணமடைந்துள்ளார்.

 

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. 95 வயதானவர்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு சமீபவத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் பழனிசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அம்மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவ குழுவினர், அவருக்கு சிகிச்சை அளித்தனர். நோய் தொற்றினால் துவண்டு போகாத முதியவர், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை  ஏற்றுக் கொண்டு  மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தார். இதன் பலனாகவும் அவரின் மனத் தைரியத்தின் காரணமாகவும் கொரோனா நோயுடனான போராட்டத்தில் வெற்றி பெற்று பூரண குணமடைந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து பழனிசாமி வீடு திரும்பினார். பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வெளியேறும் போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கைதட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டால் பலரும் மனமுடைந்து விடுகின்றனர். மன தைரியத்தை இழப்பதால் உடல் பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், குணமடைய மன ரீதியாக தைரியமும், நம்பிக்கையும் முக்கியம். அந்த வகையில் 95 வயது முதியவர் பழனிசாமி நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது போல மற்றவர்களும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். அதேசமயம் அனைவரும் முகக் கவசம் கட்டாயம் அணிவதோடு, தனி மனித இடைவெளியை கடைபிடித்தால் கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து 95 வயது முதியவர் மீண்டு இருப்பது, அத்தொற்று பாதிப்பில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
Bhagyaraj Death: பாக்யராஜுக்கு முழு அரசு மரியாதை; அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்த சிஎம் விஜய்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
தன்னிகரில்லாத திரைக்கதை மன்னர் பாக்யராஜ்; பாடமான படைப்புகள்- தலைவர்கள் இரங்கல்!
K Bhagyaraj: நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
நான்-ஸ்டாப் சரவெடி.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாக்யராஜ் படங்கள்..”சமாச்சாரம், குடும்ப கதை”
Embed widget