மேலும் அறிய

கோவை ஆழியாறு அணையில் 23 காட்டு யானைகள் முகாம் ; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில், தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.வழக்கமாக இரவு நேரங்களில் அதிகமாக உலா வரும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலா வருகின்றன.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் பின்புறம் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து வந்த 23 யானைகள் கொண்ட காட்டு யானை கூட்டம் ஆழியாறு அணையின் பின்புற பகுதியில் முகாமிட்டுள்ளது. யானை குட்டிகளுடன் உள்ளதால் ஆக்ரோஷமாக காணப்படுகிறது. 


கோவை ஆழியாறு அணையில் 23 காட்டு யானைகள் முகாம் ; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

மேலும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளான நவமலை, சின்னார்பதி ஆகிய இடங்களுக்கு யானைக் கூட்டம் வராமல் தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நவமலை வழியாக செல்லும் மின்சார ஊழியர்கள் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் எனவும், அப்பகுதியில் உள்ள மக்கள் கவனமாக இருக்குமாறும் வனத்துறையினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். அணையின் கரையோரம் யானை கூட்டம் தென்படுவதால் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் காட்டு யானைகளை துன்புறுத்தக் கூடாது எனவும், மீறினால் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

காரை வழிமறித்த காட்டு யானைகள்

இதேபோல கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை  வெள்ளிங்கிரி மலைக்கு பக்தர்கள் காரில் சென்றுள்ளனர். அப்போது முதல் வளைவில் காட்டு யானைகள் சத்தம் கேட்டதால், கார் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி உள்ளார். அப்போது திடீரென அந்த சாலையில் 2 ஆண் யானைகள் வந்து நின்றது. நீண்ட நேரமாக அதே பகுதியில் நின்ற யானைகள், பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நுழைந்தது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். மேலும் யானை ஊருக்குள் வராமல் இருக்க பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பூண்டி சாலையில் இரண்டு காட்டு யானைகள் கம்பீரமாக நிற்கும் காட்சிகளை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள்  இணையத்தில் பரவி வருகிறது.


கோவை ஆழியாறு அணையில் 23 காட்டு யானைகள் முகாம் ; சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளான மேட்டுப்பாளையம், பெரியநாய்க்கன்பாளையம், போளுவாம்பட்டி, ஆழியாறு உள்ளிட்ட பகுதிகளில், தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக வழக்கமாக இரவு நேரங்களில் அதிகமாக உலா வரும் காட்டு யானைகள் தற்போது பகல் நேரங்களிலும் உலாவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
சென்னை மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.! 485 கோடியில் 3.2 கி.மீ பறக்கும் இரும்பு மேம்பாலம்- சாதித்த நெடுஞ்சாலைத்துறை
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget