மேலும் அறிய

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

ஆரணியில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கியது காவல்துறை.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. காலை மளிகை கடை, பால் கடை அத்தியாவசிய  பொருட்கள் கடைகள் மட்டும் திறக்க  வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதை மீறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலை, மார்கெட் வீதி, சத்தியமூர்த்தி கடை வீதிகளில்  வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றி திரிந்தனர். பல முறை காவல் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்தும் அதிக அளவில் சுற்றி திரிகின்றனர்.

இதனை அறிந்த டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான  நகர காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றி திரியும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

 

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

 

மேலும் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்த இளைஞர்களை டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தோப்புக்கரணம் போட வைத்து இனிமேல் நாங்கள் சாலைகளில் சுற்றி திரிய மாட்டோம் என  உறுதி மொழி ஏற்க வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள்  வெளியில் வரவேண்டுமே தவிர வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வெளியே வர கூடாது என்று டிஎஸ்பி கோட்டீஸ்வரன் எச்சரித்து வாகன ஓட்டிகளை  அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள்  வாங்க காந்தி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூட்டம் குவிந்ததால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக பெரிய மைதானத்திற்கு  மாற்றினார்கள்.

 

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

இன்னிலையில், அங்கும் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டுவருகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும்  கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வதால்  அங்கேயும்  டி.எஸ்.பி தலைமையில் ஒளி பெருக்கி மூலம் மாஸ்க் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தினமும் அறிவுறுத்தி வருகின்ற நிலையில் தற்போது தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர். கடந்த முதலாவது அலையின் போது ஊரடங்கை மீறி வலம் வந்த பலருக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர். அது அவர்களை கட்டுப்படுத்தவும் செய்தது. தீவிரம் காட்டும் இந்த இரண்டாவது அலையில் பொதுமக்கள் பயமின்றி வெளியே வளம் வருகின்றனர். 

அவர்கள் மீது கறார் காட்ட வேண்டாம் என அரசு தெரிவித்ததால், போலீசாரும் அவர்களை எச்சரித்து அனுப்புவது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நூதன தண்டனைகள் வழங்கினால் தான் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் திருந்துவார்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக மீட்பு !! 24 மணி நேரத்தில் சிக்கிய கொலையாளி
விலை குறைவு..கடன் வசதி.. - பழைய வீடு வாங்குவதில் இருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் !!
விலை குறைவு..கடன் வசதி.. - பழைய வீடு வாங்குவதில் இருக்கும் ப்ளஸ் மற்றும் மைனஸ் !!
கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்
கால்வலி வராமல் இருக்க மாடிப்படி உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் ? - இதோ கட்டுமான டிப்ஸ்
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
சென்னையில் அதிர்ச்சி ; 76 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - 57 வயது பிளம்பர் கைது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
“திமுகவின் பித்தலாட்ட நாடகம் ஒருபோதும் எடுபடாது! அதிமுக ஆட்சி மலர்வது நிச்சயம்“ இபிஎஸ் அறிக்கை
TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு
"QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி
MK Stalin Alert : உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
உஷாரா இருங்க..! வாக்கு எண்ணிக்கையில் கூடுதல் கவனம் தேவை- திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அலர்ட்
Donald Trump: ''Strait of Trump'‘-ஆ.?! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா.? இப்படி பண்றீங்களே ட்ரம்ப் சார்.?!
''Strait of Trump'‘-ஆ.?! உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா.? இப்படி பண்றீங்களே ட்ரம்ப் சார்.?!
GOLD SILVER RATE: மாலையில் திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம்; இப்படி அதிரடியா கூடிடுச்சே.! தற்போது விலை என்ன.?
மாலையில் திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம்; இப்படி அதிரடியா கூடிடுச்சே.! தற்போது விலை என்ன.?
Kara Movie Review: தனுஷின் தோல்விக் கறையை நீக்கியதா ”கர” - விக்னேஷ் ராஜாவின் த்ரில்லர் படத்தின் விமர்சனம்
Kara Movie Review: தனுஷின் தோல்விக் கறையை நீக்கியதா ”கர” - விக்னேஷ் ராஜாவின் த்ரில்லர் படத்தின் விமர்சனம்
Tata Altroz Diesel Review: டாடா ஆல்ட்ரோஸ் டீசல் கார் எப்படி இருக்கு.? நிஜ மைலேஜ், செயல்திறன் எப்படி.? ஒரு முழு ரிவ்யூவ் இதோ
டாடா ஆல்ட்ரோஸ் டீசல் கார் எப்படி இருக்கு.? நிஜ மைலேஜ், செயல்திறன் எப்படி.? ஒரு முழு ரிவ்யூவ் இதோ
Embed widget