மேலும் அறிய

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

ஆரணியில் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கியது காவல்துறை.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று இரண்டாம் அலை அதிக அளவில் பரவி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. காலை மளிகை கடை, பால் கடை அத்தியாவசிய  பொருட்கள் கடைகள் மட்டும் திறக்க  வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதை மீறி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சாலை, மார்கெட் வீதி, சத்தியமூர்த்தி கடை வீதிகளில்  வாகன ஓட்டிகள் தேவையின்றி சுற்றி திரிந்தனர். பல முறை காவல் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரித்தும் அதிக அளவில் சுற்றி திரிகின்றனர்.

இதனை அறிந்த டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையிலான  நகர காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றி திரியும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

 

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

 

மேலும் தேவையின்றி இருசக்கர வாகனத்தில் வெளியே சுற்றி திரிந்த இளைஞர்களை டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் தோப்புக்கரணம் போட வைத்து இனிமேல் நாங்கள் சாலைகளில் சுற்றி திரிய மாட்டோம் என  உறுதி மொழி ஏற்க வைத்து நூதன முறையில் தண்டனை வழங்கினார். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே பொதுமக்கள்  வெளியில் வரவேண்டுமே தவிர வேறு எந்த தேவைக்காகவும் பொதுமக்கள் வெளியே வர கூடாது என்று டிஎஸ்பி கோட்டீஸ்வரன் எச்சரித்து வாகன ஓட்டிகளை  அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள்  வாங்க காந்தி மார்க்கெட்டில் அதிக அளவில் மக்கள் கூட்டம் குவிந்ததால் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட நகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை தற்காலிகமாக பெரிய மைதானத்திற்கு  மாற்றினார்கள்.

 

தேவையின்றி வலம் வந்தவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆரணி காவல்துறை!

இன்னிலையில், அங்கும் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டுவருகிறது.

மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொது மக்கள் மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும்  கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கி செல்வதால்  அங்கேயும்  டி.எஸ்.பி தலைமையில் ஒளி பெருக்கி மூலம் மாஸ்க் அணிய வேண்டும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தினமும் அறிவுறுத்தி வருகின்ற நிலையில் தற்போது தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறனர். கடந்த முதலாவது அலையின் போது ஊரடங்கை மீறி வலம் வந்த பலருக்கு போலீசார் நூதன தண்டனைகளை வழங்கினர். அது அவர்களை கட்டுப்படுத்தவும் செய்தது. தீவிரம் காட்டும் இந்த இரண்டாவது அலையில் பொதுமக்கள் பயமின்றி வெளியே வளம் வருகின்றனர். 

அவர்கள் மீது கறார் காட்ட வேண்டாம் என அரசு தெரிவித்ததால், போலீசாரும் அவர்களை எச்சரித்து அனுப்புவது மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற நூதன தண்டனைகள் வழங்கினால் தான் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் திருந்துவார்கள். 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
கள்ளக் காதலனுடன் தனிமையில் இருக்க இடையூறு ; 2 - வயது குழந்தையை அடித்துக் கொன்ற தாய்
" கணவரைப் பற்றி பேசனும் " தனியாக வரவழைத்து அத்துமீறல் - சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் அதிரடி கைது
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget