மேலும் அறிய

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுக்கு பின்னும் மேம்பாலம் சீரமைப்பை தொடங்காத நெடுஞ்சாலை துறை உயிர்பலிக்கு பின்பு தொடங்குமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்

கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரத்தில் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. அதிகளவு வெளியூர் பயணிகள் வந்து செல்லும் பகுதியாக இருப்பதால், சாலை வசதிகள் மிகவும் முக்கியமானதாக காஞ்சிபுரத்தில் கருதப்படுகிறது.
 
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கிய சாலையாக இருக்கும், காஞ்சிபுரம் -  வந்தவாசி சாலையில் செவிலிமேடு அருகே பாலாறு அமைந்துள்ளது. இந்த பாலாற்றின் குறுக்கே கடந்த 13 வருடங்களுக்கு முன்பு உயர்மட்ட பாலம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டது.

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இந்த பாலம் செய்யாறு, வந்தவாசி, திண்டிவனம் ,பாண்டிச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு மிக முக்கிய சாலையாக உள்ளது.  எப்பொழுதும் காஞ்சிபுரம் வந்தவாசி பிரதான சாலை ஆனது பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் , பால தூண்களின் இணைப்பு பகுதிகள் மிகவும் சேதம் அடைந்து வருவதாக வாகன ஓட்டிகள் தொடர் புகார் தெரிவித்து வந்தனர். அதேபோல் பாலம் மிக மோசமாக இருந்து வந்ததால் அடிக்கடி விபத்து நடைபெறுவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் புகாரியில் எதிரொலியால்  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர் .

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி திடீரென பாலம் இணைப்பு பகுதியில், அதிக விரிசல் காணப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம் சுதாகர் ஆகியோர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். பாலத்தில் இணைப்பு பகுதி மிகவும் சேதம் அடைந்ததை கண்ட, மாவட்ட ஆட்சியர் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவை பிறப்பித்து இருந்தார் . இதனை அடுத்து அந்த பகுதியில், தற்காலிகமாக  சரி செய்யப்பட்டது.
 
 

Pugar Petti: மீண்டும் சேதமடைந்த காஞ்சிபுரம் பாலம்.. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ஆனால் தற்போது , மீண்டும் அந்த பகுதியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வண்ணம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது. ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்ட பின்தான் இந்த பகுதி நீக்கும் பணியை நெடுஞ்சாலை துறை துவக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
 
இது குறித்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
 

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget