மேலும் அறிய

இன்று முதல் நடமாடும் மளிகை விற்பனை தொடக்கம்

சென்னையில் மளிகை கடை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய 2,197 கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மளிகை பொருட்களை நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று விற்பனை செய்யும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தள்ளுவண்டி வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு  வருகிறது. ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டத்தை தொடர்ந்து வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதித்துள்ளது. 

அதன்படி, சென்னையில் மளிகை கடை வியாபாரிகள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று விற்பனை செய்ய 2,197 கடைக்காரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் குறித்த தகவல்கள் மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் தொலைபேசி ஆர்டர்களின் மூலமும் மளிகை பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 'ஊரடங்கு வரும் 31-5-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். 

தமிழகத்தில் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பளை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7-00 மணி முதல் மாலை 6-00 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.


இன்று முதல் நடமாடும் மளிகை விற்பனை தொடக்கம்

இது தவிர, பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Arvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..Extra Price in TASMAC |’’அநியாயம் பண்றாங்க’’பாட்டிலுக்கு 10 ரூபாய் EXTRA! புலம்பும் மதுபிரியர்கள்KPK Jayakumar Death | பெண்ணுடன்  தொடர்பு? போலீஸ் ரேடாரில் மகன்கள்..வெளியான பகீர் தகவல்!Petrol Bunk Theft | பெட்ரோல் பங்கில் வழிப்பறி..அரிவாள் காட்டி மிரட்டல்!பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
சவுக்கு சங்கர் வழக்கு விவகாரம்: ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் கைது!
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
Lok Sabha Election 2024: இன்றுடன் ஓய்கிறது 4ம் கட்ட தேர்தல் பரப்புரை - சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் தலைவர்கள்
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
10th Supplementary Exam 2024: 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியா? துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம், எப்படி தெரியுமா?
6 years of Nadigaiyar Thilagam : சாவித்திரியாக மறுபிறப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்.. நடிகையர் திலகம் படம் வெளியான நாள்!
சாவித்திரியாக மறுபிறப்பெடுத்த கீர்த்தி சுரேஷ்.. நடிகையர் திலகம் படம் வெளியான நாள்!
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Rasipalan: தனுசுக்கு அனுசரிப்பு தேவை; மகரத்துக்கு திறமை: இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Travel With ABP : புதுச்சேரி ஊசுடு ஏரியில் படகு சவாரி... கடல்போல் காட்சியளிக்கும் குளிர்ந்த நீர்ப்பரப்பு..
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Pet Dog License: செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற உத்தரவு: எப்படி பெறுவது?
Embed widget