மேலும் அறிய

E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது.  இந்நிலையில் தலைநகரான சென்னைக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பதிவு தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில்,  மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து கடந்த 5-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய அமலுக்கு வந்தது.  இந்நிலையில் தலைநகரான சென்னைக்குள் பயணிக்கும் மக்களுக்கு இ-பதிவு தொடர்பான பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. வாடகை கார், ஆட்டோக்கள் சென்னைக்குள் செல்வதற்கே இபாஸ் வேண்டுமா? தடுப்பூசி போட செல்பவர்கள் இபாஸ் எடுக்கவேண்டுமா? போன்ற சில தொடர் கேள்விகளுக்கு பதிலளிக்கவே இந்தத் தகவல்களை கொடுக்கிறோம்.

யாருக்கெல்லாம் இ- பதிவு தேவை?

தனியார் செக்யூரிட்டி ஆட்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் இ-பதிவு மூலம் பயணிக்கலாம்

எலெக்ட்ரீசியன், ப்ளம்பர்ஸ், கணினி மற்றும் மோட்டார் பழுது நீக்குபவர்கள், மர வேலை செய்யும் தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்யும் டெக்னீஷியன்கள் ஆகியோர் இ-பதிவு மூலம் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை பயணிக்கலாம்.
 
வாடகை கார், வாடகை வாகனங்கள் 3 பயணிகளுடன் இ-பதிவு பெற்று பயணிக்கலாம். ஆட்டோவும் இ பதிவு பெற்று இரண்டு பயணிகளுடன் பயணிக்கலாம்

சென்னைக்குள் பயணம் செய்யும் தனியார் வாகனங்களுக்கும் இ-பதிவு அவசியம்


E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள இ-பதிவு தேவையா?

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணம் செய்தால் இ-பதிவு தேவையில்லை. தடுப்பூசிக்கான முன்பதிவை காண்பித்தால் போதுமானது. சுய தொழில் செய்பவர்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் இ-பதிவுக்கு இணையதள பக்கத்தில் ஒரே நேரத்தில் குவிவதால் இணையதளம் அவ்வப்போது முடங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


>>அடுத்த 100 நாட்களில் அனைவரும் அர்ச்சகராகும் சட்டம் அமல்; அமைச்சர் சேகர்பாபு பேட்டி


மற்ற தளர்வுகள்:


* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.

* காய்கறி விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.

* இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதி.

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறையை பின்பற்றி செயல்படுத்த அனுமதி உண்டு.

* அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

* சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீதம் மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளலாம்.


E-pass | சென்னைக்குள் இ-பதிவு அவசியமா? சந்தேகங்களும், பதில்களும்!

 * தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் அனுமதி.

* மின்பொருள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

* இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்படும்.

* வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி.

* கல்வி, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி

* இருசக்கர வாகனம் விநியோகிக்கும் கடைகள் வாகன பழுதுபார்க்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி

* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியாளரிடம் இருந்து பெற்று பயணிக்கு அனுமதிக்கப்படும்.

கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


>> சத்தமில்லாமல் சாதிக்கும் சித்த மருத்துவம்; 20 நாளில் 194 பேர் பூரண குணம்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.