மேலும் அறிய

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?

ராணுவ பயிற்சி முகாமில் வெடிக்காத குண்டுகள், செங்கல்பட்டு அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வீரர்கள் பயிற்சி முகாம்
 
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 ஆண்டுகளாக இயங்குகிறது. இங்கு, ராணுவம் ரயில்வேதுறை, தமிழக காவல்துறை ஆகிய துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அவப்பொழுது ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி, சிறிய வகை ராக்கெட் லாஞ்சர் பயன்படுத்தும் பயிற்சி, போர்க்காலத்தில் பயன்படுத்தப்படும் புகை குண்டுகள் ஆகியவற்றை கொண்டு பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவ்வாறு பயிற்சி மேற்கொள்ளும் பொழுது, அனுமந்தபுரம் காட்டுப்பகுதி மற்றும் ராணுவ பயிற்சி நடைபெறும் பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பொதுமக்கள் மேய்ச்சலுக்கு அனுப்பக் கூடாது என உத்தரவு போடப்பட்டு பாதுகாப்புடன் இந்த பயிற்சி நடைபெறும்.
 

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
மலையில் கிடந்த மூன்று குண்டு
 
அதேபோல பயிற்சி முடிந்த பின்பு, வீணாகும் துப்பாக்கி குண்டுகளின் கழிவு பொருட்கள், அதேபோல் வெடிக்காத குண்டுகள் ஆகியவற்றை பயிற்சியில் ஈடுபடும் வீரர்களே அப்புறப்படுத்திவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் , இன்று அப்பகுதியை சேர்ந்த சிலர் வெடிக்காத மூன்று ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை பார்த்ததாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்டலூர் துணை ஆணையர் சிங்காரவேலன் தலைமையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
செயலிழக்க செய்யப்படும்
 
இதுகுறித்து வெடிகுண்டு நிபுணர்களும் வரவேற்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. துறை அதிகாரிகள் வெடிகுண்டுகளை மீட்டு, குழி தோண்டி சுற்றி மணல் மூட்டை அடுக்கி பாதுகாப்பாக வைத்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டுகளை  செயலிழக்க செய்ய  உரிய முறையில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் சம்பந்தப்பட்ட (வெடிபொருள் தடவியல்) துறை நிபுணர்கள் மூலமாக பாதுகாப்பாக  வெடிகுண்டுகள்    செயலிழக்கம் செய்யப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chengalpattu : புதரில் கிடந்த 3 ராக்கெட் லாஞ்சர்..! பாதுகாப்பாக அகற்றிய காவல்துறை..! நடந்தது என்ன...?
 
 கடந்த 2018 ஆம் ஆண்டு..
 
 
அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் வீட்டில் இருந்து, வெடித்து சிதறிய வெடிகுண்டுகளின் உதிரி பாகத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட விவசாயி வெடிக்காத குண்டுகளை சேகரித்து தனது வீட்டில் வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. சுமார் அவர் வீட்டிலிருந்து 149 வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த குண்டுகள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படி செயலிழக்கம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதே பகுதியில் வீரர்கள் வெடிக்காத குண்டுகளை , விட்டு விட்டு சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை !! தாய் - கள்ளக் காதலன் கைது
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
திடீர் மின் தடை அறிவிப்பு! சென்னையில் உஷாராக இருக்க வேண்டிய முக்கிய பகுதிகள் இவைதான்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜூலை 31-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரியுமா.? பாருங்க

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: ஒத்துழைக்க மறுக்கும் ஊழல் அதிகாரிகள்? பாடம் புகட்ட ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget