மேலும் அறிய

Case Filed Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (நவம்பர் 24) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர்ர் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் வாட்சப் குரூப்களில் தவறான தகவலை பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக எம் எல் ஏவுமான நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அவதூறு கருத்துகள்:

முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏவாக இருந்தவர் நட்ராஜ். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல நடிகர்கள் உள்ள வாட்சப் குரூப்பில் இருந்துள்ளார்.

அதில் தமிழ்நாடு அரசு பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை கூறி வந்ததாகக்கூறப்படுகிறது.

இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்கள் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்து போகவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் போலியான கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் நட்ராஜ் அந்த வாட்சப் குரூப்பில் கூறியிருந்ததாக  ஸ்க்ரீன்ஷாட்டும் பரவியது.

வாட்சப் குரூப்பில் தவறான தகவல்களை பரப்பும் முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த செய்தி வெளியாகும்:

இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ”ஒரு போலீஸ் அதிகாரி, உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்.  இன்று இந்த செய்தி வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த  ஷீலா என்ற வழக்கறிஞர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு:

அந்த புகாரில் தவறான செய்திகளை பதிவிட்டு தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் ஏன்ற உள்நோக்கத்துடனும், மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் பதிவிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது, 153 A, 504, 505(1)(b), 505(1)(c), 505 (2), 66 IT act (2008) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (21.06.2026): கேரளா சம்ருதி லாட்டரியில் இன்று 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் வெளியீடு!
LIVE | Kerala Lottery Result Today (21.06.2026): கேரளா சம்ருதி லாட்டரியில் இன்று 3 மணிக்கு குலுக்கல் முடிவுகள் வெளியீடு!
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'
கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு செக் வைக்கத் திருமாவளவன் மாஸ் ஐடியா - 'முதலமைச்சரே உடனே கூட்டுங்க'

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget