மேலும் அறிய

Case Filed Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

Former DGP Nataraj: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் கிரைம் காவல்துறையினர் இன்று (நவம்பர் 24) வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முதலமைச்சர்ர் குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் வாட்சப் குரூப்களில் தவறான தகவலை பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக எம் எல் ஏவுமான நட்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அவதூறு கருத்துகள்:

முன்னாள் டிஜிபியும், அதிமுக சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏவாக இருந்தவர் நட்ராஜ். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் உயர் அதிகாரிகள் மற்றும் பிரபல நடிகர்கள் உள்ள வாட்சப் குரூப்பில் இருந்துள்ளார்.

அதில் தமிழ்நாடு அரசு பற்றியும், முதலமைச்சர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை கூறி வந்ததாகக்கூறப்படுகிறது.

இது தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெறுவோமென்றால் அப்படிப்பட்ட வெற்றி தேவையில்லை. இந்துக்கள் வாக்கு பெறும் அளவிற்கு திமுக தரம் தாழ்ந்து போகவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் போலியான கார்டு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் நட்ராஜ் அந்த வாட்சப் குரூப்பில் கூறியிருந்ததாக  ஸ்க்ரீன்ஷாட்டும் பரவியது.

வாட்சப் குரூப்பில் தவறான தகவல்களை பரப்பும் முன்னாள் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் சிலர் வலியுறுத்தி வந்தனர்.

இந்த செய்தி வெளியாகும்:

இந்நிலையில், இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ”ஒரு போலீஸ் அதிகாரி, உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர், நான் கூறியதாக தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்துக்கள் ஓட்டுகள் வேண்டாம் என நான் சொன்னதாக பதிவு செய்துள்ளார். இதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்.  இன்று இந்த செய்தி வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த  ஷீலா என்ற வழக்கறிஞர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த புகாரின் பேரில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு:

அந்த புகாரில் தவறான செய்திகளை பதிவிட்டு தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் ஏன்ற உள்நோக்கத்துடனும், மதக்கலவரங்களை தூண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் உள்நோக்கத்துடன் பதிவிட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது, 153 A, 504, 505(1)(b), 505(1)(c), 505 (2), 66 IT act (2008) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
"பெங்களூரு டிராபிக்.. கடவுளே வந்தாலும் பிரச்னையை தீர்க்க முடியாது" டி.கே. சிவகுமார் தடாலடி!
Embed widget