மேலும் அறிய

Breaking LIVE: திருப்பதி கோயிலில் இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து..!

Breaking LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு இணையதளத்தில் கீழே உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Key Events
Breaking Live update december 31 national tamilnadu world flash news updates Breaking LIVE: திருப்பதி கோயிலில் இலவச நேர ஒதுக்கீடு தரிசனம் 2 நாட்களுக்கு ரத்து..!
முக்கிய செய்திகள்

Background

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளைக் கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார். 

அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் ஏராளமான பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி தவித்து வந்த அந்த மக்கள் முன்னெடுத்த  நீண்டகால,  போராட்டத்திற்குப் பிறகு, கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேங்கை வயல் பகுதியில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தான், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் சிலருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மலம்:

இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை பரிசோதித்ததில் சிறுவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி மக்கள் சந்தேகத்தின் பேரில், நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

திட்டமிட்டு சதிச்செயல்?

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என புகார்:

இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரிக்க, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கை வயல் பகுதிக்கு வந்தனர். அப்போது, குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் மற்றும் பாதிக்கப்பட்ட பட்டியிலன மக்களிடம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். அப்போது, பேசிய பட்டியிலன மக்கள் அங்குள்ள அய்யனார் கோயிலில் தாங்கள் அனுமதிக்கப்படுவதிவில்லை என புகாரளித்துள்ளனர். இதுதொடர்பாக, ஊர்மக்களிடம் விசாரித்தபோது சாதிய பாகுபாடு எதுவும் நாங்கள் காட்டுவதில்லை எனவும், பட்டியிலன மக்கள் தான் கோயிலுக்குள் வருவதில்லை என்றும் விளக்கமளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் அதிரடி:

இதையடுத்து கோயிலின் சாவியை கேட்டு பெற்ற மாவட்ட ஆட்சியர், பட்டியிலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தார். இதுதொடர்பாக பேசிய பட்டியலின பெண், கடந்த 3 தலைமுறைகளாக வேங்கை வயல் கிராமத்தில் நாங்கள் வசித்து வருவதாகவும், ஆனால் இப்போது தான் முதல்முறையாக இந்த கோயிலுக்குள் வந்து இருப்பதாகவும் கூறினார். எந்த விதத்தில் எங்களை தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் கருதுகின்றனர் என புரியவில்லை. நாங்களும் படித்து சமூகத்தில் முன்னேற தொடங்கிவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தார்.

இதையடுத்து கிராம மக்களின் கோரிக்கையை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அவை தொடர்பாகவும், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். 

11 பேர் கொண்ட குழு

இறையூர் கிராமத்தின்,  வேங்கை வயல் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில்  மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிய ஏ.டி.எஸ்.பி. ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

18:10 PM (IST)  •  31 Dec 2022

370 மரங்கள் வெட்டிக் கடத்தல்..!

ஊட்டியில், 370 யூகலிப்ட்ஸ் மரங்களை 4 நாட்களாக வெட்டியதில் வனசரகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

15:39 PM (IST)  •  31 Dec 2022

16வது போப் காலமானார்..!

16வது போப்பாக இருந்த பெனெடிக்ட் தனது 95வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
TASMAC liquor : புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
புத்தாண்டில் மதுப்பிரியர்களுக்கு கொண்டாட்டம்.! டாஸ்மாக் சொன்ன சூப்பர் நியூஸ்
Iran Economic Crisis: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்; ஒரு டாலருக்கு இவ்ளோ ரியாலா.?
Embed widget