மேலும் அறிய

Odisha Tree Teacher: ஒரு மனிதன் 30000 மரங்கள் : 11 வயதுச் சிறுவனின் கனவு நனவான கதை!

அந்தர்யாமி முதன்முதலில் ஒரு விதையை விதைத்தபோது அவருக்கு வயது 11. அவர் விதைத்தது குரங்கு எச்சம் பட்ட ஆலம் விதை.


விதைகளைத் தொட்டியில் தூவிவிட்டு அது வளர்கிறதா என்று எட்டிப்பார்க்கும் பழக்கம் உங்களுக்குச் சிறுவயதில் இருந்தது உண்டா? அப்படியென்றால் அந்தர்யாமி சாஹூவின் கதை உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.  ஒடிசாவின் கண்டிலோ கிராமத்தைச் சேர்ந்த அந்தர்யாமி முதன்முதலில் ஒரு விதையை விதைத்தபோது அவருக்கு வயது 11. அவர் விதைத்தது குரங்கு எச்சம் பட்ட ஆலம் விதை. தான் படித்த பள்ளியின் வளாகத்தில் அதை விதைத்தவர் தினமும் அது முளைக்கிறதா இல்லையா என எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தார். அந்தர்யாமிக்கு மரங்கள் காதலானது அப்படித்தான். 


Odisha Tree Teacher: ஒரு மனிதன் 30000 மரங்கள் : 11 வயதுச் சிறுவனின் கனவு நனவான கதை!

அன்று தொடங்கி ஒவ்வொரு வருடமும் தனது கிராமத்தின் பொதுவெளிகளில் தொடர்ச்சியாக இரண்டு மரங்களை நட்டு வருகிறார் அந்தர்யாமி. அவருக்கு வயது ஆக ஆக மரங்களின் மீதான ஆசையும் வளர்ந்தது. உத்திரப்பிரதேசத்தின் சிலெட்படா பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பிறகு அங்கிருக்கும் பிள்ளைகளையும் தன்னைப் போல மரம் நடப் பயிற்சி கொடுத்தார். 

தான் ஆசிரியராகப் பணியாற்றிய நாட்களில் தனது பள்ளியின் பின்புறம், தனது கிராமம் இருந்த மாவட்டத்தின் பொதுவெளிகள், காய்ந்த நிலப்பகுதிகள், சாலையோரம் என அத்தனைப் பகுதிகளிலும் செடிகளை நட்டார். மரம் நடுவதை மட்டுமே தனது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் இவரை கச்சா சார் என அழைக்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள், கச்சா என்றால் ஒடியாவில் மரம் என்று பொருள். 


Odisha Tree Teacher: ஒரு மனிதன் 30000 மரங்கள் : 11 வயதுச் சிறுவனின் கனவு நனவான கதை!

அந்தர்யாமிக்குத் தற்போது 75 வயது. ஆனால் 11 வயதில் இருந்த அதே பேரார்வத்தோடு இப்போதும் தான் நட்ட மரம் வளர்கிறதா என எட்டிப்பார்த்துக்கொண்டிருக்கிறார், ‘1973ல் தான் நான் ஆரம்பப் பள்ளியொன்றில் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது தொடங்கி ஆறு பள்ளிகளில் பெரிய அளவில் மரம் நடும் இயக்கத்தை உருவாக்கியிருக்கிறேன். காட்டு இலாகாவிலிருந்து மரக்கன்றுகளை அல்லது விதைகளைக் கொண்டு வந்து நர்சரியும் உருவாக்கியுள்ளேன்’ எனக் கூறுகிறார் அந்தர்யாமி. 2004ம் ஆண்டு வரை மட்டும் தனியாக 10000 மரக்கன்றுகளும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து 20000 மரங்களும் நட்டிருக்கிறார். நட்ட மரங்களை பகுதி வாரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார். சால், தேக்கு, ஆலமரம், மாங்காய், அத்தி போன்ற மரங்களை நடுவதை வலியுறுத்துகிறார் அவர். சோஷியல் மீடியா போன்ற டெக்னாலஜி எதுவும் தெரியாததால் கையாலேயே மரங்கள் செடிகள் விலங்குகளின் படங்களை வரைந்து போஸ்டர்களை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று மரங்களைக் காப்பாற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் அந்தர்யாமி. 

மரங்களை நட்டுவிட்டால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றிவிடலாம் என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் நமது பயோடைவர்சிட்டியை காப்பாற்றுவதுதான் சூழலைக் காப்பாற்றும். இந்தப் பகுதியின் தேனீக்கள், எறும்புத்தின்னிகள், ஆந்தை, மான், யானை, பட்டாம்பூச்சி, பல்லி, வௌவால் என 40 இனவகைகள் வரைக் கண்டறிந்து அவற்றைப் போஸ்டர்களாக உருவாக்கியுள்ளேன்’ என்கிறார் அவர். அவரது இந்த முயற்சியால் 2001 முதல் 2008 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அந்தப் பகுதியின் காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தனிமனிதர் ஒருவரால் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை நடமுடிகிறது என்றால் எல்லோரும் இணைந்தால் இந்த நாடு எத்தனைப் பசுமையாக இருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம். அந்தர்யாமிக்கள் இந்த பூமியின் அத்தியாவசியமானவர்கள்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Holi Safety Tips: ஹோலி பண்டிகை கொண்டாடுறீங்களா? - சரும பிரச்னை வராமல் தடுக்க டிப்ஸ்!
Holi Safety Tips: ஹோலி பண்டிகை கொண்டாடுறீங்களா? - சரும பிரச்னை வராமல் தடுக்க டிப்ஸ்!
வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவது பாதுகாப்பானதா? அதிர்ச்சியூட்டும் உடல்நல பாதிப்புகள்
வாரத்திற்கு ஒருமுறை மது அருந்துவது பாதுகாப்பானதா? அதிர்ச்சியூட்டும் உடல்நல பாதிப்புகள்
Holi 2026 Wishes: தோழிகளுக்கு அனுப்ப அழகான ஹோலி வாழ்த்துகள் கொட்டிகிடக்கு... HD போட்டோவும் இருக்கு... தட்டிவிடுங்க
தோழிகளுக்கு அனுப்ப அழகான ஹோலி வாழ்த்துகள் கொட்டிகிடக்கு... HD போட்டோவும் இருக்கு... தட்டிவிடுங்க
கூட்டுறவுத் துறையில் SRB-DRB தேர்வு முடிவுகள் எப்போது? கீழ்ப்பாக்கத்தில் தேர்வர்கள் போராட்டம்!
கூட்டுறவுத் துறையில் SRB-DRB தேர்வு முடிவுகள் எப்போது? கீழ்ப்பாக்கத்தில் தேர்வர்கள் போராட்டம்!
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
USA Iran: 165 பள்ளி மாணவிகள், 201 பேர்..! கொன்று குவித்த அமெரிக்கா, இஸ்ரேல் - வாய் திறக்காத உலக நாடுகள்
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
Embed widget