மேலும் அறிய

Garlic Recipe : 10 நிமிடங்களில் பூண்டு ஊறுகாய் ரெடி.. எண்ணெய் மணக்க மணக்க.. இதுதான் ரெசிப்பி..

பூண்டு ஊறுகாய்,சுவைக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் ஆகச்சிறந்த நன்மைகளை தரும்.

ஊறுகாய் என்றால், ஊறிய காய், உறுகின்ற காய் மற்றும் ஊரும் காய் என மூன்று காலங்களையும் சேர்த்து குறிக்கும்.இதற்கு என்ன பொருள் என்றால் மூன்று காலங்களிலும் உப்பு போன்ற பொருளில் ஊறிக் கொண்டே இருக்கும் என்று ஒரு அர்த்தமும்,எக்காலத்திலும் பயன்படுத்தலாம் என்ற மற்றொரு அர்த்தமும் இதில் அடங்கி இருக்கும்.

இப்படியான ஊறுகாய் என்றதும், அனைவர் வாயிலும் எச்சில் ஊரும். இந்த ஊறுகாய்க்கு அச்சாறு என்ற மற்றும் ஒரு பெயரும் உண்டு.

மாம்பழம், எலுமிச்சை, கேரட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி, பூண்டு, புளிச்சக்கீரை,புதினா மற்றும் தக்காளி நிறைய ஊறுகாய்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அசைவத்திலும் கூட இறால் ஊறுகாய் மீன் ஊறுகாய் என பல விதங்களிலும் ஊறுகாய்கள் நம் நாவை நடனமாட வைக்கின்றன. உப்பு கண்டம்  மற்றும் கருவாடும் கூட ஒரு வகையில் காய்ந்த ஊறுகாய் என்றே நாம் சொல்ல வேண்டும்.

இப்படியான இந்த ஊறுகாய்களுக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த வரவேற்பும்,தனி ரசிகர் கூட்டமும் உண்டு. பொதுவாக தயிர் சாதம்,எலுமிச்சை சாதம் மற்றும் தக்காளி சாதம் போன்ற சாத வகைகளுக்கும் இந்த ஊறுகாய்களில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடத்தில் இருக்கிறது.இப்படி இந்தியர்கள் அனைவர் வீடுகளிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் இந்த ஊறுகாய்கள் மது பிரியர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்தியாவில் ஏதாவது ஒரு விருந்திற்கு நாம் சென்றால், இலையில் முதலில் இனிப்பும்,பிறகு உப்பும், அடுத்ததாக ஊறுகாயும் வைக்கும் பழக்கம் தோன்றுதொட்டு தொட்டு நம் மரபில் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஊறுகாயின் அடிப்படை என்னவென்று நாம் பார்த்தால்  எண்ணெய் மற்றும் உப்பில் ஊறி இருப்பது. இந்த இரண்டும் சேர்ந்து ஊறிக் கொண்டே, அந்த பொருளில் பாக்டீரியா உருவாகி கெட்டுப் போவதை தடுக்கின்றது.

இப்படியான ஊறுகாய்களில் பூண்டு ஊறுகாய்க்கு என்று தனி சுவையும், ரசிகர் கூட்டமும், நிறையவே இருக்கிறது. இந்த பூண்டு ஊறுகாயை பொருத்தவரை, துணை உணவாக தொட்டுக்கொள்ள என்று மட்டும் இல்லாமல்,வெறும் சோற்றுடன் இதை பிணைந்து சாப்பிடவும் மக்கள் விரும்புகிறார்கள். 

இப்படிப்பட்ட இந்த பூண்டு ஊறுகாய் குறுகிய நேரத்தில் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம். தோல் உரித்த அரை கிலோ பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நீராவியில் இட்லிக்கு அவிப்பது போல அவித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஊறுகாய்கள் தயாரிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகச் சிறந்ததாக இருக்கும்.  நல்லெண்ணெய் சிறிது தாளிப்பதற்கு எடுத்துக் கொண்டு அதில் கடுகை இட்டு வெடித்து வந்ததும்,எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆவியில் அவித்து ஆற வைத்த பூண்டில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். இந்த கலவையில் கொதிக்க வைத்த எண்ணெயை  ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
இதில் இந்த கலவைக்கு மேலாக   எண்ணெய் மிதக்கும் அளவிற்கு  இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஒரு இரண்டு மணித்தியாலங்களுக்கு பிறகு,சூடு ஆறிய பின் இந்த சுவை மிகுந்த ஊறுகாய் சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும்.

இப்படி தயாரான பூண்டு ஊறுகாயை காற்று போகாத கொள்கலன்களில், அடைத்து,ஆக குறைந்தது 3 மாதங்கள் பயன்படுத்தலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு, வெயில் படும்படியோ அல்லது ஒரு பாத்திரத்தில் இந்த ஊறுகாயை இட்டு சூடு செய்து  பயன்படுத்தலாம்.

இப்படி தயாராக இருக்கும் இந்த பூண்டு ஊறுகாய்,சாப்பிடுவதற்கு ஒரு உற்ற,தொடுபொருளாக இருக்கும். இந்த பூண்டு ஊறுகாய்,சுவைக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் ஆகச்சிறந்த நன்மைகளை தரும். அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1.சளி குணமாக்கும் பூண்டு ஊறுகாய்.

 பூண்டின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக   உணவில்,குறிப்பாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் ஒவ்வொரு உணவிலும் சிறிது பூண்டு ஊறுகாயைச் சேர்ப்பது உங்கள் உடலை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும்.


2. இதயத்திற்கு இதமான பூண்டு

 ஒரு மனிதனுக்கு இதயத்தில் அடைப்பு வருவதற்கு முக்கியமான காரணம் அங்கு ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு ஆகும். பூண்டு என்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒரு மந்திரப் பொருளாகும். இது மட்டுமன்றி  அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் இந்த பூண்டு கொண்டுள்ளது. இதயத்திற்கு மட்டுமின்றி இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைப்பதிலும்,பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.

3.இரத்த சுத்திகரிப்பானாக செயலாற்றும் பூண்டு.

இயற்கையாகவே பூண்டானது ஒரு கிருமி  நாசினியாகும். ஆகையால் இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் இந்த பூண்டனது உதவுகிறது.

இப்படி பூண்டு கலந்து செய்யப்படும் இந்த ஊறுகாயை தினமும் உட்கொள்வதினால், கொழுப்பு, இரத்த சுத்தப்படுத்துதல் மற்றும் நாவிற்கு சுவை என நம்மால் நிறைய நன்மைகளை பெற முடியும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget